டெல்லி: உலகளவில் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களாக விளங்கும் இந்தியாவின் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களை அதிகளவில் திறக்கப்படும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டில் மேலும் 8 ஐஐடி கல்வி நிறுவனங்க திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஐஐடிக்கள் அமைப்பதற்கான பரிந்துரையை நிதித்துறையிடம் அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான குழு அளித்துள்ளது, மேலும் இதற்கான நிதி ஒப்புதல் பெறும் தருவாயில் உள்ளது இக்குழு. இருப்பினும் இதில் இப்போது ஒரு சிக்கல் உள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது. அதை பற்றி முழுமையாக இங்கு பார்போம்.
பிரச்சனைகள்
இந்த 8 ஐஐடி கல்வி நிறுவனங்களை இந்தியாவில் திறக்க போதிய இட வசதிகளும், ஆசிரியர்களை தேடும் பணிதான் மிகவும் கடினம் என இக்குழு தெரிவித்துள்ளது. மேலும் பாஜக தலைமையிலான அரசு தனது தேர்தல் வாக்குமூலத்தை சார்தே இன்று வரை செயல்பட்டு வருகிறது.
ஸ்மிருதி இரானி
மேலும் ஸ்மிருதி இரானி அவர்களை பற்றி பல எதிரமறை கருத்துகள் வெளிவந்தாலும், அதை பொருட்படுத்தாமல் சென்ட்ரல் யூனிவர்சிட்டு பார் ஹிமாலையன் டெக்னாலஜி மற்றும் நேஷ்னல் இ-லைப்ரரி ஆகிய திட்டங்களில் தீவரமான செயல்பாட்டை காட்டி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
அருண் ஜேட்லி
மேலும் இந்த இரு முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒப்புதலை நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரான அருண் ஜேட்லியிடம் நிதி தேவைக்காக பேசி வருகிறார்.
8 ஐஐடி கல்லூரிகள்
இந்தியாவில் கேரள, கர்நாடகா, ஜார்கண்ட், உத்தரகண்ட், கோவா, சிக்கிம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஐஐடி கல்லூரிகள் இல்லை. இந்த புதிய 8 கல்லூரிகள் இந்த 7 மாநிலங்களில் அமைக்க வழிவகை செய்யபட்டுவருகிறது.
நிதி நெருக்கடி
இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் 16 ஐஐடி கல்லூரிகளில் பல கல்லூரிகள் நிதி நெருக்கடியில் தவித்துவருகிறது. மேலும் புதிய கல்லூரிகளை அமைக்க சுமார் ரூ14,000 கோடி செலவாகும் என ஸ்மிருதி இரானியின் குழு கணித்துள்ளது.