ஹைதராபாத்: இந்தியாவில் 29வது மாநிலமாக உருவெடுத்திருக்கும் தெலுங்கான, ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இம்மாநிலத்தின் வணிகவரி துறையினர் தெலுங்கானவிற்கு தனியே ஒரு வலைபக்கத்தில் உருவாக்கியுள்ளனர். www.tgct.gov.in
மேலும் விவரங்களை பிரித்து எடுக்க ஆந்திர மாநிலத்தின் வணிகவரி துறை வலைபக்கத்திற்கு www.apct.gov.in ஜூன் 1 காலை 8 மணியில் இருந்து ஜூன் 2 காலை 8 மணிவரை முடுக்கப்பட்டதாக ஆந்திர வணிகவரி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தகவல் பிரித்தெடுத்தை தொடர்ந்து ஆந்திர மற்றும் தெலூங்கான மாவட்டங்களின் மக்கள் தத்தம் வலைபக்கத்தில் தங்களது பதிவு முகவரியை பயன்படுத்தி வரியை செலுத்தவும், விவரங்களை பெறவும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆந்திர மாநில வணிகவரி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.