டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் அமைந்த பிறகு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நடத்திய முதல் கூட்டம் நேற்று நடந்தது, இதில் இத்தாலிய அடம்பர சில்லறை விற்பனையாளரான புல்காரி, ஸ்டெபனோ ரிக்கி மற்றும் வால்ட் டிஸ்னி ஆகிய நிறுவனங்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்புதல் பெற்றது.
இதில் யூடிவிஐ சாப்ட்வேர் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ரூ.1,100 கோடி அன்னிய முதலீட்டின் பரிந்துரையும் உள்ளது.
32 நிறுவனங்கள்
அன்னிய முதலீட்டுக்காக சுமார் 32 நிறுவனங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்ததில் 26 நிறுவனங்கள் ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளது. இதில் சில மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களும் அடக்கம்.
புல்காரி நிறுவனம்
ஆடம்பர நகை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான புல்காரி இந்தியாவில் முதலீடு செய்ய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறைக்கு கடந்த செப்டம்பர் 2013ஆம் மாதம் அறிக்கையை அளித்தது. இப்பரிந்துரைக்கு தற்போது ஒப்புதல் கிடைக்கும் தருவாயில் உள்ளது.
சில்லறை வர்த்தக துறை
மத்திய அரசு சில்லறை வர்த்தக துறைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. ஆனால் இந்த 32 பரிந்துரைகளில் சில சில்லறை வர்த்தக பரிந்துரைகளும் இருந்தது குறிப்பிடதக்கது.
முக்கிய நிறுவனங்கள்
இந்த பரிந்துறைகளில் ரிக்கிட் பெக்னிசர், ஏடி&டி குளோபல் நெட்வொர்க், மோர்கன் ஸ்டான்லி குளோபல் சர்விசஸ், பி.என்.பி பரிபாஸ் இந்தியா மற்றும் சில உணவகங்களும் இதில் அடக்கம்.