டெல்லி: இன்றைய நிலையில் இண்டர்நெட் பற்றி 5 வயது குழந்தைகளுக்கும் தெரியும். இண்டர்நெட் நம் வாழ்வை எந்த அளவிற்கு எளிமையாகியுள்ளதோ அதே அளவிற்கு நம்மை ஆபத்தில் சிக்க வைத்துள்ளது.
இந்த இண்டர்நெட் உலகில் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த சைபர் தாக்குதல் அனைத்தும் வளரும் நாடுகளை குறிவைத்து சில சமுக விரோதிகள் மற்றும் அமைப்புகள் செய்து வருகின்றனர். இந்த குற்றங்கள் அடையாள திருட்டு முதல் வங்கி தகவல்கள், அரசு விபரங்கள் திருட்டு வரை நடக்கிறது. இத்தகைய குற்றங்களில் அதிகளவில் பாதிப்பு அடைந்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
உதவிகள்
இந்த அமைப்புகளுக்கு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் உதவி பல மாதிரி வடிவத்தில் கிடைக்கிறது. இத்தகைய தாக்குதலில் இருந்த தப்பிக்க உலக நாடுகள் அனைத்தும் மென்பொருள் மற்றும் வன்பொருள்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.35 இலட்சம் கோடி செலவிடுகிறது.
இழப்பு
இத்தகைய குற்றங்களின் மூலம் 445 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகிறது என மெக்கப்பீ நிறுவனத்தின் ராஜ் சமனி தெரிவித்துள்ளர்.
இந்தியா
இத்தகைய சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும் இந்தியாவில் தகவல் பாதுகாப்பு சிறப்பாக இல்லாத காரணத்தினால் இந்தியாவில் தகவல் திருட்டுகள் அதிகளவில் நடக்கிறது. மேலும் இந்தியவின் தகவல் பாதுகாப்பு துறை இதற்கான திட்டங்களை தீட்டி வருகிறது.
அமெரிக்கா, சீனா
2013ஆம் ஆண்டில உலகில் சைபர் தாக்குதலின் மூலம் அதிகளவல் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். கடந்த ஆண்டு மட்டும் சைபர் குற்றங்களால் 324 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பட்டியலில் சீனா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.