மும்பை: இந்திய நாணய சந்தையில் இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு குறைய துவங்கியது. இதற்கான முக்கிய காரணமாக வங்கிகளிலும் இறக்குமதியாளர்களிடத்தில் டாலரின் இருப்பு குறைவாக இருந்தது என்ற் வர்த்தக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய வர்த்தக முடிவில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 59.25 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது. இன்றைய வர்த்தம் முடியும் தருவாயில் ரூபாயின் மதிப்பு 59.31 ரூபாயாக சரிந்துள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் விலை 57 சென்ட் அதிகரித்ததால் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 113.59 டாலராக அதிகரித்தது. டாலர் மதிப்பு உயர்விற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது.
மேலும் இன்றைய பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக அமைந்தது. மும்பை பங்கு சந்தையில் இன்று 348.04 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 25,228.17 புள்ளிகளை எட்டியுள்ளது.