மும்பை: அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு மற்றும் பத்திர விற்பனை கடந்த வாரம் துவங்கியது. இதன் விற்பனை புதன்கிழமை காலை முடிந்த நிலையில் இந்நிறுவனம் இந்தி விற்பனையின் மூலம் சுமார் 6,100 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நான்காவது தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பங்கு விற்பனையிந் மூலம் ரூ.4,800 கோடியும், நீண்ட கால முதலீடு நோக்கில் அமெரிக்க டாலர் முதலீடாக ரூ.12,000 கோடியும் பெற்றுள்ளது. மேலும் பத்திர விற்பனை மற்றும் விநியோகத்தின் மூலம் ரூ.1,300 கோடி நிதியை பெற்றுள்ளது.
பங்கு விற்பனை
அனில் அம்பானி தலைமை வகிக்கும் இந்நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய் கிழமை வர்த்தக முடிவில் 142.13 ரூபாய்க்கு முடிவடைந்தது. இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 8.67 கோடி பங்குகளை விற்க முடிவு செய்தது.
பங்கு நிலை
கடந்த ஒரு மாத காலத்தில் இந்நிறுவனத்தின் பங்கு விலை கடுமையான ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் நிறுவந பங்கு விற்பனை செய்தியை கேட்ட முதல் இந்நிறுவனத்தின் பங்குகள் சிறப்பாக செயல்பட துவங்கின இதனால் செவ்வாய் கிழமை முடிவில் இந்நிறுவன பங்குகள் 151.35 ரூபாய்க்கு முடிவடைந்தது.
தலைக்கு மேல் இருக்கும் கடன்
மார்ச் 31ஆம் தேதியின் தகவல் படி இந்நிறுவனத்தின் கடன் தொகை மொத்தம் 40,178 கோடி ரூபாய். மேலும் இதற்கான வட்டி பல வருடங்களாக நிலுவையில் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் செலவு 749 கோடி ரூபாயில் இருந்து 907 கோடியாக உயர்ந்துள்ளது.
கடன் அளவு குறைப்பு
பல வருடமாக இந்நிறுவன தனது கடன் மதிப்பை குறைக்க திண்டாடி வருகிறது. இந்த பங்கு விற்பனையில் மூலம் கிடைத்த நிதியை கொண்டு இந்நிறுவனம் தனது கடந் அளவை அதிகளவில் குறைக்க திட்டமிட்டுள்ளது.