மும்பை: ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், இந்தியா மொபைல் மற்றும் டேப்லெட் சந்தையில் இறங்கபோவதாக சில வாரங்கள் முன்னே அறிவித்திருந்தது.
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் இன்று காலை தனது சொந்த எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன பெயரான டிஜிப்பிளிப் நிறுவனத்தின் மூலம் 9,999 ரூபாய் என்ற விலையில் இன்று விற்பனையை துவங்கியது.
இங்கேயும் இலவசம்
இந்த டேப்லெட்டை வாங்குவோருக்கும் 5000 ரூபாய் மதிப்புள்ள விற்பனை சலுகையும், 2,000 ரூபாய் மதிப்புள்ள ஈ-புக்கும் இலவசமாக அளிக்கிறது.
விற்பனை
இந்த விற்பனை புயலில் விற்கப்படும் டேப்லெடுகளுக்கு 100 நகரங்களில் 120 சேவை மையங்களில் வாடிக்கையாளர் சேவையை அளிக்கிறது டிஜிபிளிப். இந்த டேப்லெட் அறிமுகத்தின் மூலம் பிளிப்கார்ட் மொபைல் மற்றும் டேப்லெட் சந்தையில் கால்தடம் பதித்துள்ளது.
சிறப்புகள்
இந்த XT712 டேப்லெட்டில் 1280 x 800p HD ஐபிஎஸ் டிஸ்ப்லே, 1.3 GHz குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸ்ர் மற்றும் டூயல் சிம் வசதி கொண்டது. இதை புக் செய்ய இதை க்ளிக் செய்யவும்!!
பிளிப்கார்ட்
இந்நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது வர்த்தகத்தை பெறுக்கிய வண்ணமே உள்ளது, ஆடை, எலெக்ட்ரானிக்ஸ், ஷூ, மொபைல் என 5,000 க்கும் அதிகமான பொருட்களை விற்பனை செய்ய துவங்கியுள்ளது. கூடிய விரைவில் இந்நிறுவனம் அண்டை நாடுகளுக்கும் தனது சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது.