பெங்களுரூ: அரும்பாடுபட்டு உருவாக்கிய நிறுவனத்தை சிறந்த கைகளில் கொடுத்த நிம்மதியுடன் வீடு திரும்பிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி இப்போது என்ன செய்கிறார்??. இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்து விலகிய நாராணய மூர்த்தி தற்போது முழுநேர முதலீட்டாளராக மாறியுள்ளார்.
இந்நிலையில் தனது சொந்த முதலீட்டு நிறுவனமான கட்டமரான் நிறுவனத்தின மூலம் ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் நாராணயன மூர்த்தி ஐடி துறையை விட்டு சில்லறை வர்த்தக துறையில் இறங்கியுள்ளார்.
உறுதி செய்த கட்டமரான்
இதுகுறித்து கட்டமரான் நிறுவனம், அமேசான் நிறுவனத்தில் மூதலீடு செய்ய உள்ளதாக உறுதிசெய்துள்ளது. ஆனால் அதற்கு மேற்பட்ட பதில்களை இரு நிறுவனங்களும் செய்தியாளர்களுக்கு அளிக்க மறுத்துவிட்டது.
அமேசான் - கட்டமரான்
இந்த இரு நிறுவனங்களும் அமேசான் நிறுவனத்தின் பின் செயல்பாட்டில் இணைந்து செயல்பட உள்ளன. அமேசான் நிறுவனம் இந்தியாவில் இறங்கி சில மாதங்களே ஆனாலும், அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
அன்னிய முதலீட்டு சட்டம்
இந்தியாவின் அன்னிய முதலீட்டு சட்டத்தின் படி இன்போசிஸ் நிறுவனம் இந்த முதலீட்டு திட்டத்தில் அமேசான் நிறுவனத்தில் 51 சதவீதம் பெற்று செயல்படும்.
ஆடை நிறுவனம்
நாராயண மூர்த்தி தலைமையிலான கட்டமாரன் நிறுவனம் கடந்த வருடம் ஆடை தயாரிப்பு மற்றும் ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஏபி.காம் நிறுவனத்தில் சுமாப் 26 கோடி ரூபாய் முதலீடு செய்தது குறிப்பிடதக்கது.