டெல்லி: புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆற்று வேண்டும் என்ற வாய்மொழிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் இப்போது புகையின் விலை கேட்டாலே நெஞ்சம் புண்படுகிறது. சுகாதாரத் துறை நிதியமைச்சகத்திற்கு அளித்த கடிதத்தில் ஒரு சிகரெட்டின் விலையை 3.50 ரூபாய் உயர்த்த வேண்டும் என இத்துறை வவியுறுத்தியுள்ளது.
இதனை பொருத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிகரெட்டின் வாட் வரியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் சுகாதாரத் துறை கேட்டு கொண்டுள்ளது.
உபயோகத்தை குறைக்க வேண்டும்
கடந்த சனிக்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாட்டில் இருக்கும் எல்லா மாநில, யூனியன் பிரதேசங்கள் தலமையாகத்திற்கும் மற்றும் டெல்லி கவர்னர் நஜீப் ஜங் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அனைவரும் வாட் வரியில் குறைந்தது 50 சதவீத வரியை உயர்த்த வேண்டும் எனவும், விலையேற்றத்தால் மக்களிடையே புகைபிடிக்கும் பழக்கும் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
விலையேற்றம்
வர்தான் கடிதத்தா ஏற்று ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஸ்மீர் மாநிலங்களில் சிகரெட்க்கான வாட் வரி 65 சதவீதம் மற்றும் 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வருமானம்
மக்கள் சிகரெட்டுக்காக பயன்படுத்தும் பணம் குடும்ப நிதி திட்டத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படுத்துகிறது, அதற்கு முக்கிய காரணம் அதன் மலிவான விலை தான். 2011ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது மலிவாக உள்ளது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
உயிர் இழப்பு
இந்தியாவில் மட்டும் புகைபிடிக்கும் பழக்கத்தினால் ஒரு வருடத்தில் சுமார் 10 இலட்சம் பேர் உயிர் இழக்கின்றனர். அதேபோல் ஆண்கள் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 8.3 கோடியில் இருந்து 10.5 கோடியாக உயர்ந்துள்ளது. அதில் பெண்களை பற்றி ஆய்வு செய்யவில்லை, அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், எண்ணிக்கையின் வளர்ச்சி மிகவும் அதிகம்.