டெல்லி: வியாழக்கிழமை வெளியிட்ட மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் முக்கியமான ஒன்றை மறந்து விட்டார் என நினைத்த வேலையில் அதனைக்குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டார். அது வேறு ஒன்றும் இல்லை தங்க இறக்குமதி பற்றிதான்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தங்க இறக்குமதியின் மீது அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைவானது இந்திய பொருளாதாரத்திற்கு நன்மை அளித்தது. ஆனால் இறக்குமதி தங்கத்தை நம்பி இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகம் செய்யப்படுகிறது. புதிய அரசி ஆட்சிக்கு வந்த உடன் தங்க இறக்குமதியில் சில மாற்றங்களை செய்தது, இதனால் அதிகளவில் தங்க கடத்தல் குறைந்தாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுப்பாடுகள் தளர்க்க முடியாது
மேலும் வெள்ளிகிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தங்க இறக்குமதியில் இருக்கும் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக தற்போது தளர்க்க முடியாது. நிதி நிலைமை சரியான பின்பு அதன் மீதுள்ள கட்டுப்பாடுகள் கண்டிப்பாக குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிவ் அண்டு டேக் பாலிசி
செய்தியாளர்களுக்கு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், நாட்டின் பொருளாதாரம் மேம்படும்போது கண்டிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி மற்றும் அதில் இருக்கும் அளவீடுகளில் மாற்றம் இருக்கும். அதுவரை இத்துறை பொறுமை காப்பது அவசியம், அதைவிட நாட்டின் பொருளாதாரத்தை மேம்படும்பட வேண்டும் எண்ணம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
தற்போது நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளதன், காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. எனவே நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைப்பதில் மிகந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகளின் எதிரொலி
இரண்டு மத்திய அரசுகளும் விதித்த கட்டப்பாடுகளின் எதிரொலியின் காரணமாக தங்கு இறக்குமதி சுமார் 72 சதவீதம் குறைந்துள்ளது. அதிகப்படியான டாலர் இருப்பு குறைந்ததால் 201-13ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.7ஆக குறைந்தது. இதன் முக்கிய காரணம் தங்கம் மற்றும் வெள்ளியின் அதிகப்படியான இறக்குமதி தான்.
ரூபாய் மதிப்பு
சந்தையில் நிலவரப்படி டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 60.14 ரூபாய் என்ற விதத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது.