மும்பை: இந்தியாவின் சாப்ட்வேர் சந்தைக்கு உலகளவில் முகவரி கொடுத்த இன்போசிஸ் நிறுவனத்தை பற்றி கடந்த சில மாதங்களில் கசப்பான செய்திகளை மட்டுமே நம்மால் கேட்க முடிகிறது. இந்த நிலை மாறாத என நினைத்த பலருக்கு இன்று ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.
2014ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் சுமார் ரூ.2,866 கோடி லாபத்தை காட்டியுள்ளது. இது கடந்த வருடத்தின் அதே காலாண்டை ஒப்பிடுகையில் 21.6 சதவீதம் அதிகமாகும், அதேபோல் கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் அது 3.5 சதவீதம் அதிகமாகும். இந்த இக்கட்டான நிலையிலும் கூட இந்நிறுவனம் லாபகரமான நிலையில் உள்ளதை சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.
லாபம்.. சுபம்..
இன்போசிஸ் நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த காலாண்டின் ஒட்டுமொத்த லாபமாக 12,770 கோடி ரூபாய் பெற்றுள்ளது, இது கடந்த வருடத்தின் அதே காலாண்டை ஒப்பிடுகையில் 13.3 சதவீதமாகும், கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 0.8 சதவீதம் அதிகமானது என் குறிப்பிட்டு இருந்தது.
டாலர் வருமானம்
எப்போது இன்போசிஸ் நிறுவனத்தின் டாலர் வருமானத்தின் மீது அனைத்து முதலீட்டாளர் மீது அதித நம்பிக்கை உண்டு, ஏன்னென்றால் இந்தியாவின் பிற சாப்ட்வேர் மொடா குடிகாரர்களை விட இன்போசிஸ் நிறுவனத்தின் டாலர் வருமானம் அதிகளவில் இருக்கும் அந்த வகையில் இந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் டாலர் வருமானம் 7.1 சதவீதம் உயர்ந்து 482 மில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடதக்கது.
வாடிக்கையாளரின் நம்பிக்கை
நிறுவனத்தின் கடுமையான இத்தகைய சூழலிலும் 21.6 சதவீதம் அதிக லாபம் ஈட்டியிருப்பதன் முக்கிய காரணம் வாடிக்கையாளர் எங்கள் மீது வைத்துள்ளது அதிகப்படியான நம்பிக்கை என்றே சொல்ல முடியும் என இந்நிறுவனத்தின் சீஇஓவான ஷிபுலால் தெரவித்தார்.
விஷால் சிக்கா
இம்மாத இறுதியில் சீஇஓ பதவியில் இருந்து விலகும் ஷிபுலால் மேலும் கூறுகையில் இந்நிறுவன பொறுப்புகளை சிக்காவிடம் லாபகரமான நிலையில் அளிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கறேன் என அவர் தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் முதல் நாள் விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓவாக பதவியேற்றிகிறார்.
பங்கு சந்தை
இன்றயை பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீத உயர்வுடந் துவங்கியது குறிப்பிடதக்கது.