டெல்லி: இந்தியாவில் மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் நான்கு மாத காலத்தில் குறைவான அளவை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு உணவு பொருட்களின் ஏற்றுமதிக்கு அதிகளவில் கட்டுப்பாடுகளை விதித்தது, இதன் காரணமாக பணவீக்கம் கடந்த நான்கு மாத காலத்தில் கணிசமான அளவில் குறைந்துள்ளது.
ஆனால் பருவ மழையின் பற்றாக்குறையின் காரணமாக இந்தியாவின் உணவு பணவீக்கம் சில மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கருத்துகள் நிலவுகிறது .
பணவீக்கம்
கடந்த மாதத்தை ஒப்பிடும் போது பணவீக்கம் 5.43 சதவீதமாக இருந்தது, அதேபோல் மே மாதம் அதிகளவில் 6.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
நரேந்திர மோடி
உணவு பொருட்கள் விலை உயர்வு, பணவீக்கும், மோசமான பொருளாதார நிலைமை ஆகிய காரணங்களால் முந்தைய மத்திய அரசை மக்களின் ஆதரவுடன் கவிழ்த்து நரேந்திர மோடி பதவியில் அமர்ந்தார். முந்திய காங்கிரஸ் ஆட்சியில் வெங்காயம் மற்றும் உருளை கிழங்கின் விலை வரலாற்று உச்சத்தை பெற்றது.
ஈராக் பிரச்சனை
பணவீக்கத்தின் பிரச்சனை எரிகிற நெருப்பு என்றால் எண்ணெய் போல ஈராக் பிரச்சனை தாக்கியது இதனால் உணவு மற்றும் எரிவாயுவில் விலை உயர்வை சந்திக்க நேரிட்டது. மேலும் கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஈராக்கில் பஞ்சம் எற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
குறைந்த மழை
பருவ மழை காலம் துவங்கிய நேரத்தில் மிகவும் குறைவான அளவே மழை பெய்தது இதனால் விவசாய மாநிலங்கள் அனைத்து அதிகளவில் பாதிப்படைந்தது. இதனால் பால், உருளை, தக்காளி போன்ற மிகவும் அத்தியாவசியமான பொருட்களின் விலை கடுமையாக உயரந்தது. இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பண புழக்கத்தை ஊக்குவிக்க விட்டி குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்தியாவின் நிதி நிலையை உணர்ந்து ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை 8 சதவீதமாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். அவரது அடுத்த நிதிநிலை அறிக்கை வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி.
பணவீக்கத்தின் முக்கிய காரணம்
இந்திய தனது 80 சதவீத இறக்குமதியில் வெறும் எண்ணெய் மட்டும் இறக்குமதி செய்கிறது. இதனால் உலக சந்தையில் எண்ணெய் விலையில் சிறிய அளவில் மாற்றம் இருந்தால் கூட இந்தியாவை மிகப்பெரிய அளவில் இந்த விலை உயர்வு பாதிக்கிறது.