லாஸ் ஏஞ்சல்ஸ்: இன்றைய டெக்னாலஜி உலகில் பெரும் புள்ளிகள் என்றால் அதில் சில நிறுவனங்களே உள்ளது. அதில் முக்கியமான இருநிறுவனங்கள் ஆப்பிள் மற்றும் ஐபிஎம், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து ஐபோன் மற்றும் ஐபேட் ஆகிய சாதனங்களுக்கு புதிய அப்ளிகேஷன்களை தயாரிக்க ஒரு புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறுகையில் இந்த கூட்டு முயற்சி மூலம் சுமார் 100 அப்ளிகேஷன் தயாரிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.
எதற்கு இந்த கூட்டணி
ஆப்பிள், ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்ததன் மூலம் ஆப்பிளின் ஐ-ஒஎஸ், டிவைஸ் மேனேஜ்மென்ட், பாதுகாப்பு, அனல்டிக்ஸ் மற்றும் மொபைல் இன்டிகிரேஷன் ஆகியவற்றிற்கு ஐபிஎம் கிளவுட் சேவையை பெறவே இந்த கூட்டணியை ஆமைத்துள்ளது ஆப்பிள்.
முதல் முறையாக ஐஓஎஸ் பயன்பாட்டாளர்கள் ஐபிஎம் நிறுவனத்தின் சேவையை பெற உள்ளனர், இது ஆப்பிள் தயாரிப்புகளின் வர்த்தகத்தை அதிகளவில் சந்தைபடுத்த உதவும் என இந்நிறுவனத்தின் சீஇஓ டிம் குக் தெரிவித்தார்.