பஹ்ரைன்: அரபு நாடுகளில் வேலை மற்றும் பிஸ்னஸ் விஷயங்களுக்காகவும் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று பஹ்ரைன், இதனால் இந்தியார்களின் நலனுக்காக பஹ்ரைன் பொருளாதார வளர்ச்சி குழு ஒரு புதிய விசா கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய விசா பஹ்ரைனில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் பொருந்தும், மேலும் இது எல்க்டிரானிக் முறையில் வருகிற அக்டோபர் மாதம் முதல் பெற்றுக்குகொள்ள முடியும் எனவும் இக்குழு தெரிவித்துள்ளது.
புதிய விசா முறை
இந்த புதிய விசா கொள்கையின் மூலம் விசாவை ஒரு மாத காலம் வரை நீட்டித்துக்கொள்ளலாம், அதேபோல் இதை முன்று முறை புதுப்பிக்கவும் முடியும். இதனால் பஹ்ரைனில் இந்தியர்கள் இனிமேல் அதிக நாட்களுக்கு வாழ முடியும். இதுமட்டும் அல்லாமல் மல்டிப்புள் என்ட்ரி விசாவும் வழங்கப்படும்
வர்த்தகம்
இத்தகைய கால நீட்டிப்புகள் பிஸ்னஸ் செய்யும் பயனிகளுக்கும் அதிகளவில் உதவும், இதனால் அவர்கள் பஹ்ரைனில் உள்ள அனைத்து இடங்களுக்கும் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாமல் சென்று வர முடியும்.
சுற்றுலா பயணிகள்
இந்த புதிய நடைமுறையால் வெளிநாட்டு சுற்று பயணிகளுக்கும் மிகவும் சாதகமான அமையும், இதனால் இந்நாட்டின் வர்த்தகம் மேம்படும்.
இந்தியர்கள் அதிகம்
இந்த சிறிய பஹ்ரைனில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாம், சுமாப் 3 இலட்ச இந்தியார்தகள் வாழ்கின்றனர் என இந்நாட்டின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இதுமட்டும் அல்லாமல் இங்கு அதிகளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளில் முதன்மை வகிக்கிறது, இதனை அடிப்படையாக கொண்டுதான் பஹ்ரைன் பொருளாதார வளர்ச்சி குழு இந்தியார்களுக்கு விசா சலுகை அளித்து வருகிறது.
வர்த்தகம்
கடந்த 2011ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையே நடந்த வர்த்தக மதிப்புமட்டும் சுமார் 1.7 பில்லியன் டாலர் வரை எட்டும்.