பெங்களுரூ: இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் இப்போது ஈ-லேர்னிங் பரிவை துவங்கியுள்ளது. இப்பிரிவில் சுமார் 1,900 பொருட்கள் மற்றும் ஆயிரக்கனக்கான தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளது. இதனால் பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்களின் பட்டப்படிப்புக்கான அனைத்து விதமாந புத்தகங்களும் இந்த பிரிவில் உள்ளது. மேலும் இந்த பிரிவு மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த வாரம் அந்தரங்க பொருட்களை விற்கும் பிரத்யேக பிரிவை துவங்கியது. இப்பிரிவை துவங்கிய ஒரு வாரத்திற்குள் விற்பனை கலக்கட்டியதாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். உடலுறவுக்குத் தேவையான பொருட்களை விற்பதற்கு தனித்தனியே நிறுவனங்கள் இருக்கும்போது பிளிப்கார்டின் இந்த முயற்சி சிறப்பானது என வாடிக்கையாளர் இப்பரிவில் கருந்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பிளிப்கார்ட் துவங்கிய இந்த சிறப்பான ஈ-லேர்னிங் பரிவில் உள்ள சிறப்புகளை பார்போம்.
விர்ச்சுவல் புக்ஸ்
இந்த பிரிவில் பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களும் விர்ச்சுவல் பாட முறையில் உள்ளது. இதன் மூலம் மாணவ மானவியர்கள் எளிதாக படிக்கவும் புரிந்துக்கொள்ளவும் முடியும். மேலும் இந்த பாட முறை போட்டி தேர்வுகள் எழுத மிகவும் உதவியாக இருக்கும்.
சிறந்த நிறுவனங்கள்
மேலும் இத்தகைய விர்ச்சுவல் பாடங்கள் முறையில் மிகவும் பிரபலமான நிறுவனங்களான கரியர் லான்சர், எடுரைட். எடுக்கார்ட், மெரிட் நேஷன், டிசிஒய் ஆன்லைன் மற்றும் பிரக்டீஸ் குரு ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் இப்பிரிவில் இருக்கும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
கல்வி
இன்றைய கல்வி மிகவும் கடினமாக இருக்கும் நிலையில் இத்தகை விர்ச்சுவல் பாட முறை மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதை அனைவருக்கும் எளிய முறையில் கிடைக்க பிளிப்கார்ட் உதவிகிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது என இந்நிறுவனத்தின் உயர் இயக்குனர் நிப்பூன் மெஹரா தெரிவித்தார்.
இ-புக்ஸ்
மேலும் இப்பிரிவில் கனிணி, மொபைல், டேப்டெல் போன்றவற்றில் எளிதாக படிக்க உதவு இ-புக்ஸ் விற்பனைக்கு உள்ளது. இதை வாங்கவும், பயன்படுத்தவும் இண்டர்நெட் தொர்பு மிகவும் அவசியம்.
கேஷ் பேக்
இப்பிரிவின் துவக்க சலுகையாக பிளிப்கார்ட் இப்பிரிவில் வாங்கும் பொருட்களுக்கு 100 சதவீத கேஷ் பேக் ஆஃபரை வழங்கியள்ளது. இதுமட்டும் அல்லாமல் இப்பிரிவில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு ஃப்ரி ஷிப்பிங் சலுகையை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.