டெல்லி: இந்திய வருமான வரித்துறையின் உயர் கொள்கை வகுக்கும் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய தலைவர் கே.வி. சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய வருவாய் துறையின் உயர் அதிகாரிகளில் ஒருவர்.
சௌத்ரி அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று நிதியமைச்சகத்தின் மேற்கு அலுவலகத்தில் பதவியேற்றக உள்ளார். அவரது பதவி காலம் 3 மாதம் மட்டுமே. மேலும் இவரது பெயர் பிரதமர் தலைமை வகிக்கும் அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆர்.கே.திவாரி அவர்கள் வியாழன் அன்று இப்பதவியில் இருந்து ஒய்வு பெற்றார். எனவே இப்பதவிக்கு இடைக்கால தலைவராக திரு. சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்
இதற்கு முன் சௌத்ரி வருவாய் துறையின் தேசிய மூலதன பிரிவின் தலைவராக இருந்தவர், மேலும் 2ஜி ஸ்பெக்ரம் அளக்கீடு, எச்.எஸ்.பி.சி ஜெனிவா வரி செலுத்துவோர் மீதான வழகக்குகள, கருப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பு பரிவில் பல முக்கிய பதவிகளில் இடம்பிடித்துள்ளார்.