கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விபத்துகளுக்கு பிறகு இந்நிறுவனத்தின் பங்கு விலை, நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இந்நிறுவனத்தை முழுமையாக இந்நாட்டு அரசின், முதலீட்டு நிறுவனமான கஜானா நிறுவனம் கைபற்ற முடிவு செய்துள்ளது இதனால் இந்நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்நிறுவனத்தின் பங்குகள் 0.24 ரிங்கிட் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது, ஆனால் இன்று காலை இதன் விலை 0.25 ரிங்கிட் என்ற அளவில் இதன் மதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
வர்த்தக தடை
பங்கு கைபற்றுதல் காரணமாக இந்நிறுவனத்தின் பங்குகள் பொது வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவன பங்குகள் இதற்கு முன் 0.265 ரிங்கட் என்ற அதிகப்படியான விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
கஜானா நிறுவனம்
மலேசிய அரசின் ஆஸ்தான முதலீட்டு நிறுவனமான கஜானா நிறுவனம், ஏற்கனவே மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை பெற்றுள்ளது. மீதமுள்ள 30 சதவீதம் பங்குகளை இம்முறை கைபற்றியுள்ளது இதன் மூலம் மலேசிய ஏர்லையன்ஶ நிறுவனம் இனி அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள்ள செயல்படும். மேலும் இந்நிறுவனம் மலேசிய நிறுவனத்தின் மீதமுள்ள 30% பங்குகளை 0.27 ரிங்கட் என்ற விலையில் கைபற்ற உள்ளது.
பங்கு விலை
மேலும் இந்நிறுவனத்தின் பங்கு விலை நடப்பு நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் நிறுவனத்தின் விரிவாக்க திட்டம் மற்றும் நிதிநிலையின் காரணமாக அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நஷ்டம்
ஏற்கனவே மார்ச் மாதத்தில் இந்நிறுவனத்தின் MH370 விமான கானாமல் போனதாலும், MH17 உக்ரைன் சுட்டு விழ்த்தியதாலும் பெருத்த நஷ்டத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2013ஆம் ஆண்டு மட்டும் இந்நிறுவனம் சுமார் 364 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 3 வருடமாக இந்நிறுவனம் நஷ்டத்தை மட்டும் சந்தித்து வருவது குறிப்பிடதக்கது.