மும்பை: தென்இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி மற்றும் ஒளிப்பரப்பு நிறுவனமான சன் டிவி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வெறும் 1 சதவீத வளர்ச்சியை மட்டுமே சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 5 சதவீதம் சரிந்து 396 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
மேலும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி, கணிப்புகளை விட குறைந்துள்ளதால் ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்தம் லாபம் 166 கோடி ருபாய் மட்டுமே பெற்றது. இந்நிறுவனம் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டதன் விளைவாக, சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணியை நடத்துவதற்கான செலவில் அதிகப்படியான நஷ்டத்தை சந்தித்துள்ளது கவனத்திற்கூரியது.
கேபிள் டிவி
சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பு மற்றும் கேபிள் டிவி வணிகத்தில் உள்ளது. இப்பிரிவில் இந்நிறுவனம் இதே காலாண்டில் 164 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. மேலும் மொத்த வருமானத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 5 சதவீத வளர்ச்சியை சந்தித்து 634 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
ஐபிஎல் வருவாய்
கலாநிதி மாறன் தலைமை வகிக்கும் இந்நிறுவனம் தொலைக்காட்சி, ஒளிப்பரப்பு போன்ற துறைகளில் மட்டும் அல்லாமல் கடந்த 7 வருடமாக இந்தியாவை மட்டும் அல்லாமல் உலக நாடுகளை கலக்கி வரும் ஐபிஎல் போட்டிகளில் இந்நிறுவனம் கலந்து கொண்டு வருகிறது. இந்த 7 போட்டிகளில் கடந்த 2 வருடமாக சன் நெட்வொர்க் தலைமையில் சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணி ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்நிறுவனத்திற்கு வருமானம் 368 கோடி கிடைத்தாலும், மொத்தத்தில் நஷ்டத்தை மட்டுமே இந்நிறுவனம் சந்தித்துள்ளது.
2ஜி வழக்கு
இந்நிறுவனம் 2ஜி ஊழல் வழக்கில் முக்கிய பொறுப்பு வகுக்கிறது. மேலும் இந்நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதிமாறன் மற்றும் அவது தம்பி தயாநிதி மாறன் அவர்களும் இந்த ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவர்.
பங்கு சந்தை
இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 412 ரூபாய் என்ற நிலையில் இருந்த பங்குகள் ஒரே நாளில் 396 ரூபாய் வரை சரிந்துள்ளது. இன்று மட்டும் மும்பை பங்கு சந்தை மட்டும் நிஃப்டியில் சுமார் 458,466 பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.