மும்பை: உலகளவில் 70 சதவீத இந்தியர்கள் அடுத்த 6 மாதங்களில் இந்திய நாட்டின் பொருளாதாரம் கண்டிப்பாக முன்னேறும் என நம்பிக்கையுடன் இருப்பதாக உலக ஆய்வு நிறுவனமான இப்சாஸ் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் "இப்சாஸ் எக்னாமிக் ஆஃப் தி வோல்டு" என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் பொருளாதாக ரீதியில் இந்தியா கடந்த ஜூன் மாதத்தில் சுமார் 75 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உலகளவில் மிகுந்த நம்பிக்கையுடைய பொருளாதார நாடுகளில் இந்தியா 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் சவுதி அரேபியா முதல் இடத்திலும், ஜெர்மனி இரண்டாம் இடத்திலும் உள்ளது. முன்றாம் இடத்தை இந்தியா, சுவீடன் நாட்டுடன் பகிர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் 47 சதவீத இந்திய மக்கள் இந்திய பொருளாதாரத்தை விட மாநில அரசின் பொருளாதாரக நிலைமை இன்னும் சிறப்பாக உள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.