ரூ.6,000 கோடி மதிப்புடைய மின் நிலையத்தை வளைத்துப்போட்ட கெளதம் அதானி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான மற்றும் மின் உற்பத்தி நிறுவனமான லான்கோ இன்ப்ராடெக் நிறுவனத்தின் உடுப்பி மின் நிலையத்தை ரூ.6,000 கோடி ரூபாய்க்கு அதானி பவர் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. அனல் மின் துறையில் நடந்த மிகப்பெரிய ஒப்பந்தங்களில் இது மிகவும் முக்கியமானது.

இந்த உடுப்பி மின் நிலையம் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு திறனுடையது. உடுப்பி மின் நிலையத்தை கைபற்றிய அதானி பவர் நிறுவனத்தின் தலைவர் கெளதம் அதானி, பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நன்பர் ஆவார். மேலும் இந்நிறுவனம் தெலங்கானாவில் புதிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் பணியில், அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

லான்கோ இன்ப்ராடெக் மற்றும் அதானி பவர் நிறுவனத்திற்கும் இடையே நடந்த இந்த ஒப்பந்தத்தில், நிறுவன கைபற்றுதல் துவக்கத்தில் லான்கோ நிறுவனம் 2000 கோடி ரூபாய் பெற்றும். மீதமுள்ள 4000 கோடி ரூபாய் நீண்ட நாள் கடன் அடிப்படையில் அதானி பவர் நிறுவனம் இந்நிறுவனத்திற்கு செலுத்தும்.

நிறுவன விரிவாக்கம்

நிறுவன விரிவாக்கம்

மேலும் இந்த மின்நிலையத்தை 1,320 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமாக மாற்ற ஏற்கனவே லான்கோ நிறுவனம் கர்நாடகா மாநில அரசுடன் ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. அதனால் அதானி குழுமம் இம்மின் நிலையத்தின் மேற்பட்ட விரிவாக்க பணிகளை கவனித்துக்கொள்ளும் எனவும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருந்தது.

நிலக்கரி இறக்குமதி

நிலக்கரி இறக்குமதி

லான்கோவின் உடுப்பி மின்நிலையம் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை கொண்டு செயல்படுகிறது. மேலும் இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 90 சதவீதம் கர்நாடாக மாநிலத்திற்கும், 10 சதவீதம் பஞ்சாம் மாநிலத்திற்கும் விநியோகம் செய்கிறது. இந்த உற்பத்தி நிலையம் வருடத்திற்கு சுமார் 4 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகித்து வருகிறது. இறக்குமதிக்கு மங்களூர் துறைமுகத்தை பயன்படுத்தி வருகிறது.

லான்கோ நிறுவனத்திற்கு என்ன லாபம்???

லான்கோ நிறுவனத்திற்கு என்ன லாபம்???

இந்த ஒப்பந்தத்தின் மூலம் லான்கோ நிறுவனத்தின் அதிகப்படியாக இருக்கும் கடன்களை குறைக்க எதுவாக அமைந்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் துவக்கத்தில் 2000 கோடி ரூபாய் பணமாக கிடைப்பதால் கடனை உடனடியாக குறைக்கு முடியும் எனவும் லான்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்த கடன்

மொத்த கடன்

லான்கோ இன்ப்ராடெக் நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 36,000 கோடி, இக்கடன் தொகையை குறைக்கவும், வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் வங்கியாளர்களிடம் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

அதானி பவர்

அதானி பவர்

ஏப்ரல் 3ஆம் தேதியின் தகவல் படி அதான் நிறுவனம் சுமார் 8,620 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்துவருகிறது. இதனால் இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனம் தென் இந்தியாவில் புதிய உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

இந்த ஒப்பந்தத்தின் காரணமாக இன்றைய பங்கு சந்தையில் லான்கோ நிறுவனத்தின் பங்குகள் 4.90 சதவீத உயர்வும், அதானி பவர் நிறுவனம் 2.75 சதவீத உயர்வும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lanco sells Udupi plant to Adani for Rs.6,000 cr

Lanco Infratech Ltd. (LITL), on Wednesday, sold its 1,200-MW Udupi Power plant to Adani Power for more than Rs.6,000 crore. This is the largest deal in the thermal power space, the company said.
Story first published: Thursday, August 14, 2014, 13:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X