புவனேஸ்வர்: இந்தியாவில் பலதுறை நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, ஒடிசாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை துவங்க திட்டமிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் அதானி குழுமத்தின் மின் உற்பத்தி செய்யும் திறன் 25 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மின் விநியோகத்தையும் அதிகரிக்கும் என்றும் தெரிகிறது. மேலும் இந்தியாவில் வளரந்து வரும் மின் உற்பத்தி நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனம் அதானி பவர் ஆகும்.
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பிரதமர் நரேந்திர மோடி யின் நெருங்கிய நன்பர் ஆவார்.
லான்கோ இன்ஃப்ரா
அதானி குழுமம் சமிபத்தில் கர்நாடகாவில் உள்ள லாங்கோ இன்ஃப்ராடெக் நிறுவனத்திற்கு சொந்தமான உடுப்பி மின் உற்பத்தி நிலையத்தை சுமார் 6000 கோடி ரூபாய்க்கு கைபற்றியது. இந்நிறுவனத்தை கைபற்றிய அடுத்த சில நாட்களில் ஒடிசா மின் திட்டத்தை அறிவித்தது குறிப்பிடதக்கது.
1,200 மெகாவாட் மின் உற்பத்தி
இந்த உடுப்பி மின் உற்பத்தி நிலையம் சுமார் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடையது. மேலும் இந்த மின் நிலையம் முழுக்க முழுக்க இறக்குமதி செய்யப்படும் நிலக்கறியின் மூலம் செயல்பட்டு வருகிறது.
ஒடிசா மின் நிலையம்
அதானி குழுமம், இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஒடிசா அரசுடன் இணைந்து இன்னும் நான்கு மாதங்களுக்குள் கையெழுத்திட்டு மின் நிலையக் கட்டுமானப் பணிகளைத் துவங்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் சுரங்கத் துறைத் தலைவர் ராஜேஷ் ஜா தெரிவித்ததாக ரியூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இலக்கு மற்றும் தேவைகள்
அதானி குழுமம் ஒடிசாவில் 1000 மெகாவாட் உற்பத்தி என்ற இலக்கை 2017 ஆம் ஆண்டிற்குள் அடைய எண்ணியுள்ளது. இதற்குத் தேவையான நிலக்கரி, ஒடிசாவில் இருக்கும் 70 மில்லியன் டன் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து பெறப்படும்.
20 சதவீத வளர்ச்சி
தற்போது அதானி பவர், சுமார் 8,580 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவியுள்ளதோடு, தற்போது ஒடிசா அரசுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலமும், லாங்கோ நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலமும் மின் உற்பத்தில் சுமார் 20 சதவீத வளர்ச்சியை காண உள்ளது.