டெல்லி: இந்தியாவில் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் விநியோக பிரச்சனையை தடுக்க மியான்மரில் இருந்து சுமார் 1 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏன் இந்த திடீர் இறக்குமதி, இந்தியாவில் அரிசி உற்பத்தியில் பற்றாக்குறையா??
எதற்கு இந்த இறக்குமதி..
மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களின் ரயில்வே பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது, கட்டுமான பணிகளால் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து உணவு பொருட்களை கொண்டு செல்வதை விட பக்கத்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்து செலவு குறைவு என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரயில்வே கட்டமைப்பு
இந்த புதிய கட்டமானத்தின் மூலம் இரு மாநிலங்களும் இந்தியாவின் முக்கிய ரயில் பாதைகளில் இணைக்கப்படும் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இம்மாநிலங்களின் வர்த்தக மற்றும் போக்குவரத்து சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும் என தெரிகிறது.
அரிசி இறக்குமதி
இந்தியா 30 ஆண்டுகளுக்கும் பிறகு இப்போது தான் அரிசி இறக்குமதி செய்கிறது, அதுவும் தரை வழியாக.
இந்திய உணவு அமைப்பு (FCI)
அக்டோபர் மாதம் முதல், இந்திய உணவு அமைப்பு (FCI) தலைமையில் மாநில வர்த்தகம் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 20,000 டன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல்
இருப்பு
அகஸ்ட் 16ஆம் தேதியின் தகவல் படி இந்தியாவில் 184.62 லட்சம் டன் அரிசி உள்ளது, அதேவேலையில் 74 இலட்சம் நெல் உள்ளது.