கெயின்ஸ்: சீனாவிற்கு தாதுக்களை ஏற்றுமதி செய்ய அதிக கவனம் செலுத்திய ஆஸ்திரேலியாஅரசு, விவசாயதிற்கு முக்கியதுவம் கொடுத்தமையால் இந்தியாவிற்கு தற்போது தானிய ஏற்றுமதியில் முன்னோடியாக உள்ளது.
இந்தியாவில் தானிய உற்பத்தி குறையும் என்று முன்கூட்டியே கணித்த ஆஸ்திரேலியா,குவின்ஸலேன்டு பகுதியில் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்து தானிய உற்பத்தை துவங்கியதுகுறிப்பிடதக்கது.
குறிப்பாக சுண்டல் மற்றும் பருப்பு வகைகளில் இந்தியா அதிகளவில் கனடாவை மட்டுமேநம்பியுள்ளது. இந்நிலையில் கனடாவில் கடந்த சில மாதங்களாக பருவ நிலை மாற்றம் காரணமாகஉற்பத்தி குறைந்தது. இச்சூழ்நிலை ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக அமைந்தது.
சீனா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நல்ல நட்புறவின் காரணமாக குவின்ஸலேன்டு பகுதியில்அதிகளவில் சீனா முதலீடு செய்துவருகிறது, இதில் நிலக்கரி ஏற்றுமதி, கட்டிட துறை,ஹோட்டல் மற்றும் கசினோ, எரிவாயு ஏற்றுமதி மற்றும் பருத்தி உற்பத்தி ஆகிய துறைகளில்முதலீட்டை குவித்து வருகிறது.
மேலும் கடந்த மாதம் இந்தியாவிற்கு அணுமின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் ஏற்றுமதிசெய்யவும் ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்தது குறிப்பிடதக்கது.