டெல்லி: விழாக்காலம் துவங்கிய நிலையில் அனைவரும் அதிகப்படியான விடுமுறைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் விடுமுறையை சிறப்பாக கழிக்க வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டு இருப்போம். இதை மேலும் சிறப்பாக்க ஜெட் ஏர்வேஸ் புதிய சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை, கோவா, கொச்சி ஆகிய முக்கிய நகரங்களுக்கான பயணத்தில் வெறும் 600 ரூபாய் என்ற சலுகை கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஜெய்ப்பூர், சண்டிகர் மாநில பயணத்திலும் குறிப்பிடதக்க அளவில் சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
டிக்கெட் விற்பனை..
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தகவல் படி இந்த சலுகை விலை திட்டத்தில் டிக்கெட் விற்பனை வரும் 22 செப்டம்பர் 2014 முதல் அக்டோபர் 5, 2014 வரை மட்டுமே பதிவு செய்ய முடியும். மேலும் பயணிகள் தங்களின் பயணத்தை ஜனவரி 15, 2015 வரை எப்போது வேண்டுமானலும் பதிவு செய்துகொள்ளளாம்.
600 ரூபாய் சேவை
சென்னை, பெங்களுரூ, கொச்சி, மற்றும் கோவா ஆகிய பகுதிகளுக்கு இரு வழி பயணத்திலும் கட்டணம் வெறும் 600 ரூபாய் தான். பிற மாநிலங்களுக்கு செல்லும் போது கட்டணம் மாறுபடுகிறது.
வெளிநாட்டு சேவையிலும் சலுகை
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு பயணங்களிலும் சலுகைகளை அளிக்கிறது, இதில் முக்கியமாக சிங்கப்பூர், லண்டன், டொராண்டோ, பாங்காக், துபாய், ஹாங்காங் மற்றும் தம்மம் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு தள்ளுபடிகளை அளித்து வருகிறது.
எதிஹாட்
இந்திய நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்ததை அடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் எதிஹாட் நிறுவனத்துடனம் இணைந்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு பயணங்களுக்கும் இந்நிறுவனம் பல சலுகையை வழங்கி வருகிறது.