டெல்லி: மத்திய அரசு இந்தியாவின் முக்கிய நகரங்களை சுத்தம் மற்றும் தூய்மைபடுத்தும் 5 ஆண்டு திட்டமான "கிளின் இந்தியா மிஷன்" திட்டத்திற்கு சுமார் 62,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் 4,041 நகரங்கள் இணைகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியா மேற்கத்திய நாடுகளை போல துய்மையாக இருக்கும்.
இத்திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி துவங்கும் என மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ரூ.62,000 கோடி என்ன செய்யபோராங்க???
இத்திட்டத்தின் மூலம் நாட்டின் 4000 நகரங்களில் முறையான கழிப்பிட வசதிகளை உருவாக்குதல், துப்புரவு பணிகளை நவினமையாக்குதல், திடக்கழிவு மேலாண்மை, ஆரோக்கியமான சுகாதார நடைமுறைகள் மக்களுக்கு வகுத்தல் மற்றும் ஆரோக்கயமான சுகாரதாக வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைத்தல் போன்றவை அமைக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு
இத்திட்டத்திற்கு மத்திய அரசு 14,623 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, மீதமுள்ள தொகை மாநில அரசு அளிக்கும். மேலும் இத்திட்டம் சுவாச் பாரத் மிஷன் என்ற திட்டத்தின் ஒரு பகுதியே என்று மத்திய அரசு விளக்கியுள்ளது.
1 கோடி குடியிருப்புகள்
இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடி குடியிருப்புகள் பயன்பெரும், மேலும் இந்திய நகரங்களில் சுமார் 6 இலட்சம் பொது மற்றும் தனிக் கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன. மேலும் அனைத்து நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தப்பட உள்ளது.
முக்கியமான ஒன்று
நகர மேலான்மை அமைச்சகத்தின் சுவாச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியாவின் அனைத்து நகர பகுதிகளிலும் சுத்தமான குடிநீர் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் சில மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளது குறிப்படதக்கது.