மென்பொருள் தயாரிப்பில் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் இலட்சக்கணக்கான சாப்ட்வேர் நிறுவனங்கள் இருந்தாலும் இதில் சில நிறுவனங்கள் மட்டுமே உலகளவில் பெரும் வர்த்தகத்தை செய்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் முன்னணி நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனம் புதிய பாதையில் பயணிக்க தயாராகி வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் கூறுகையில் உலகம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது, அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் நிறுவனம் வளர்ந்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
புதிய பாதை
அடுத்த 5 வருடங்களில் கிளவுட் கம்பியூடிங், பிக் டேட்டா போன்ற புதிய டெக்னாலஜிகள் தான் உலகத்தை ஆளுமை செய்யும். இதனை ஏற்கும் வகையில் ஹெச்.சி.எல் நிறுவனம் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
உலக நிறுவனங்களுக்கு போட்டி
இந்நிலையில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வளர்ச்சி இந்திய நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நிறுவனங்களுக்கும் கடுமையான போட்டி அளிக்கும் அளவிற்கு வளர உள்ளது.
கல்வி மற்றும் சுகாதார துறை
மேலும் இந்நிறுவனம் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பு மட்டும் அல்லாமல் இந்நிறுவனம் கல்வி மற்றும் சுகாகாரத்துறையில் ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டில் இந்நிறுவனம் சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது அதை பற்றி முழுமையாக பார்போம்.
நஷ்டத்தில் வளர்ச்சி
கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடுமையாக உயர்ந்த நிலையில் இந்நிறுவனத்தின் நஷ்ட அளவீடுகள் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் வெறும் 40.25 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
மொத்த விற்பனை
இதே காலகட்டதில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,337.65 கோடி ரூபாய், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டதை ஒப்பிடும் போது இதுவும் குறைவும்.
வருவாய்
இந்நிறுவனத்தின் வன்பொருள் விற்பனையில் இந்நிறுவனம் 261 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது. அதன் விற்பனையின் மூலம் 1,116.23 கோடி ரூபாய் வருவாயாக பெற்றது குறிப்பிடதக்கது.
மொத்தத்தில் நஷ்டம்
வன்பொருள் விற்பனையில் லாபம் பெற்றாலும், மொத்தத்தில் இந்நிறுவனம் இக்காலாண்டில் 214.52 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.