ஹைதெராபாத்: உலகில் காஃபி பிரியர்களின் சொர்க்கமாக கருதப்படும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இந்தியாவில் துவங்கி 2 வருடங்கள் ஆன நிலையில், தென் இந்தியாவில் தனது வர்த்தகத்தை பெருக்க கடந்த நவம்பர் மாதம் பெங்களுரூரில் புதிய கிளையை துவங்கியது.
இதன் வெற்றியை தொடர்ந்து இந்நிறுவனம் ஹைதெராபாத்தில் புதிய கிளையை துவங்கி தென்இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவு செய்துள்ளது.
டாடாவுடன் கூட்டு
ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து 50:50 என்ற பங்கு வீதத்தில் இந்தியாவில் தனத வர்த்தகத்து துவங்கியது. இதன் முதல் 2 வருடத்தில் இக்கூட்டணி டெல்லி, நொய்டா, கூர்கான் பகுதிகளில் கிளைகளை துவங்கியது.
தென் இந்தியா
இந்திய மக்களிடையே இந்நிறுவனத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் இரண்டு வருடம் கழித்து தென் இந்தியாவின் பக்கம் தனது வர்த்தகத்தை விரிவு செய்ய நினைத்த ஸ்டார்பக்ஸ் அதிக மென்பொருள் பணியாளர்கள் மற்றும் பணப்புழக்கம் அதிகம் இருக்கும் ஆரம்பர நகரமான பெங்ளுரூவை தேர்ந்தெடுத்தது. கோரமங்களாவில் தனது கிளையை துவங்கியது.
ஹைதெராபாத்தில் 58வது கிளை
இந்நிறுவனம் தற்போது 58வது கிளையை ஹைதெராபாத்தில் துவங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சுமார் 6 நகரங்களில் உள்ளது.
ஃப்ரீ வை-பை
மேலும் இக்கிளை நீண்ட கால வளர்ச்சி நோக்குடனே நிறுவப்பட்டுள்ளது என டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சீஇஓவான் அவானி தெரிவித்தார். மேலும் வாடிக்கையாளர்களை கவர் இக்கிளையில் அதிவேக இண்டர்நெட் வை-பை அமைத்துள்ளது.