வாஷிங்டன்: இந்தியா அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 வருடங்களுக்கு நீட்டித்துக் கொண்டது, இதன் மூலம் இரு நாடுகளும் இக்காட்டான சூழ்நிலையில் உதவி கரம் நீட்ட சம்மதம் செய்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்துடன் கேட்ட போது,"ஒப்பந்தம் முழுமையாக கையெழுத்தாகவில்லை, இந்த ஒப்பந்த்தம் குறித்த திட்ட வடிவங்களை குறித்து அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தது.
ஒப்பந்தம் முடிவு காலம்
மேலும் இந்த ஒப்பந்தம் அடுத்த வருடம் முடிவுக்கு வரும் நிலையில் இப்பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பாக அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சக் ஹெகல்
தற்போது அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சக் ஹெகல், பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் போன்ற விஷயங்களை பற்றி பேசியது குறிப்பிடதக்கது.
இதனால் இந்தியாவிற்கு என்ன லாபம்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதன்மையாக இரு நாடுகளுக்கும் பாதுகாப்பு, ராணுவ ஒத்திகை, ஆயுத ஏற்றுமதி, ஆயுத தொழிற்நுட்ப பகிற்தல்.
ஆயுத விற்பனை
மேலும் அமெரிக்கா தற்போது 20,000 கோடி பதிப்பிலான ஆயத ஒப்பந்தத்திற்கு சக் ஹெகல் ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க பயணம்
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் மோடி.
அன்னிய முதலீடு
இந்தியாவில் ஆயதங்களை தயாரிக்கவும், ஏற்றுமதி செய்யவும், பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டின் அளவை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிகளவு முதலீடு செய்ய அமெரிக்க , இஸ்ரேல் மற்று் ரஷ்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.