கலிபோர்னியா: ஹெச்பி என்று அழைக்கப்படும் ஹெவ்லெட் பேக்கார்ட் நிறுவனத்தின் முக்கிய துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் இரண்டாக பிரிந்து செயல்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிறுவனம் பிரிக்கும் பொழுது ஹெச்.பி நிறுவனத்தில் இருந்து சுமார் 5,000 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்குவதாகவும் ஹெச்.பி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹெவ்லெட் பேக்கார்ட்
66 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்நிறுவனத்தை தற்போது மெக் வித்மேன் அவர்கள் தலைமை வகித்து நடத்தி வருகிறார். அக்டோபர் 6ஆம் தேதி வெளியிட்ட இந்நிறுவனத்தின் தகவல்படி இந்நிறுவனத்தின் வன்பொருள் மற்றும் சேவை பிரிவில் இருந்து லேப்டாப், கம்பியூட்டர் மற்றும் பிரிண்டர் வர்த்தகத்தை தனியாக பிரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் மந்தமான போக்கு
ஹெச்.பி நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக மந்தமான வர்த்தகத்தையே சந்தித்து வருகிறது. இதனால் நிறுவனத்தின் சில பிரிவுகலை தனியாக பிரிப்பதன் மூலம் முக்கிய வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்த முடியும் என மெக் வித்மேன் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே முயற்சியை எடுக்க நினைத்த முன்னாள் தலைவர்கள் சில பல காரணங்களாக கைவிட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
பணி நீக்கம்
மேலும் இந்த நிறுவன பிரிவின் மூலம் 5000 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளார் மெக் வித்மேன். இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 3 இலட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வருவாய்
கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் சுமார் 112 கோடி ரூபாய் வருவாய் பெற்றது. மேலும் இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் இந்நிறுவனத்தின் கணினி பிரிவுகளை தனியாக பிரிக்கவும் அல்லது கணினி தயாரிப்பை விற்றுவிடவும் வலியுறுத்தி வருகின்றனர்.
மைக்ரோசாப்ட்
ஹெச்.பி நிறுவனத்தை போன்று மைக்ரோசாப்ட், சிஸ்கோ, ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனங்களும் அதிகளவில் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.