டெல்லி: இந்தியாவில் வீடுகளில் சோலார் பேனலை அமைப்பதன் மூலம் நாட்டில் 3.25 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் தற்போது சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டுமிட்டுள்ள தருவாயில் இது முக்கிய தகவல்.
மேலும் அடுத்த 5 முதல் 10 வருடங்களில் சோலார் மின் உற்பத்தியின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும் பிரிட்ஜ் டூ இந்தியா என்ற ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோலார் மின் உற்பத்தி தனல் இந்தியாவில் மற்றும் உலக நாடுகளில் நான்கு வகைகளில் அமைக்கப்படுகிறது. அவை ஸ்மால் ரூஃப்டாப், லார்ஜ் ரூஃப்டாப், யூடிலிட்டி ஸ்கோல் திட்டங்கள் மற்றும் அல்ட்ரா மெகா திட்டங்கள் என்ற அளவில் அமைக்கப்படுகின்றது.
இதில் ஸ்மால் ரூஃப்டாப் திட்டங்களை அமைப்பதில் மட்டுமே இந்தியாவில் 3.25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் அளவில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் சேலார் மூலம் தற்போது வெறும் 2600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, 2022ஆம் ஆண்டுக்குள் இதன் உற்பத்தி அளவு 20,000 மெகா வாட் வரை உற்பத்தி அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.