நியூயார்க்: சில மாதங்களுக்கு முன் உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஇஓவாக பதவி உயர்வு பெற்ற சத்ய நாடெல்லா வியாழக்கிழமை நியூயார்க் மாகாணத்தில் "உமென் இன் கம்பியூடிங்" தலைப்பில் நடந்த பெண்கள் கூட்டத்தில், அவர் பெண்கள் நிறுவனங்களில் அதிலும் முக்கியமாக டெக்னாலஜி நிறுவனங்களில் சம்பள உயர்வு கேட்ட கூடாது. நிறுவனத்தில் இருக்கும் திட்டங்கள் சரியான ஊதிய உயர்வு அளிக்கும் என நம்ப வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இவரின் இந்த சர்ச்சையான பேச்சு நியூயார்க் மற்றும் உலக நாடுகளின் முக்கிய பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வந்தது.
பாரபட்சம்
இவரின் பேச்சு நிறுவனங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தயில் உள்ள இவரது பாரபட்சமான எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. மேலும் இவரது பேச்சின் போது கூட்டத்தில் மிகுந்த சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடதக்கது.
நிறுவன சட்டதிட்டங்கள்
சத்ய நாடெல்லா தவறாக பேசியதை உணர்ந்து, நான் கூற வருவது அனைவரும் நிறுவனத்தின் சட்டதிட்டங்களின் மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறினார்.
டிவிட்டர்
பத்திரிக்கைகளை படு வேகமாக சமுக வலைதளங்களில் இவரின் சர்ச்சையான பேச்சுக்குறித்து கருத்துக்கள் பறந்தது, இதற்கு பதிலடியாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் முதலில் நிறுவனங்கள் பாலின பாரபட்சத்தை தவிற்க வேண்டும், அதன் பின் தான் ஊதிய உயர்வில் வித்தியாசம் இருக்காது என பிரச்சனையை நிறுவன சட்டதிட்டகள் மீது திருப்பிவிட்டார்.
பெண் ஊழியர்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ரெட்மாண்ட் கிளையின் தகவல் படி இந்நிறுவனத்தில் மொத்தம் 29 சதவீத பெண் ஊழியர்கள் உள்ளனர், இதில் டெக்னிக்கல், இன்ஜினியரிங் மற்றும் மேலான்மை பரிவுகளில் வெறும் 17 சதவீதம் தான். மேல்மட்ட நிர்வாக குழுவில் இன்னும் குறைவு.
மன்னிப்பு
இதற்கு வியாழக்கிழமை மாலைவேளையில் தான் கூறியது முற்றிவும் தவறு, அதற்கு மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டார் சத்ய நாடெல்லா.