பாரிஸ்: இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனமான இண்டிகோ இந்நியாவிலும் உலக நாடுகளிலும் தனது சேவையை அதிகரிக்கவும், புதிய வழித்தடங்களில் இயக்கும் நீண்ட கால திட்டத்துடன் இந்நிறுவனம் 250 ஏ320 விமானங்களை ஏர்பஸ் நிறுவனத்துடன் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து ஏர்பஸ் நிறுவனம் கூறுகையில், ஒரே ஒப்பந்தத்தில் சுமார் 250 விமானகளஶை விற்பது இதுவே முதல் முறை என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தங்கள்
சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனம் 100 ஏ320 விமானங்கள் மற்றும் 180 ஏ320 விமானங்களை வாங்குவதற்கான 2 ஒப்பந்தகளை மேற்கொண்டது குறிப்பிடதக்கது.
தள்ளுபடிகள்
இந்நிறுவனம் இந்தியாவில் கூர்கான் பகுதியில் தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இச்சந்தையில் ஸ்பைஸ்ஜெட், ஏர்ஏசியா, ஜெட்ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான சலுகை மற்றும் தள்ளுபடிகளை அளித்து வரும் நிலையில் இந்நிறுவனம் இத்தைகயை நிறுவனங்களுடன் போட்டி போடாமல், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டது.
பயணிகள் எண்ணிக்கை
இதன் எதிரோலியாக பயணிகளின் எண்ணிக்கை வருகை குறையாமல் தொடர்து உயர்ந்த வண்ணமே உள்ளது. இதனால் இன்றளவு இந்நிறுவனம் இந்தியாவில் டாப் முன்று இடங்களிலேயே உள்ளது.
புதிய சந்தை
இந்தியாவில் 200க்கும் அதிகமான குறு விமான நிலையங்களை அமைக்கும் பணியில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டில் விமான போக்குலவரத்து அதிகாரிக்கும் சாத்தியகூர்கள் அதிகளவில் உள்ளது இதனை கைபெற்றவே இண்டிகோ நிறுவனம் அதிகளவிலான விமானங்களை பெறுகிறது.
முக்கிய விமான நிலையங்கள்
மேலும் தற்போது உள்ள முக்கிய விமான நிலையங்களை விரிவாக்கவும், மேம்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசும் விரைந்து செயல்படுகிறது.
இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ நிறுவனம் இந்தியாவில் 2006ஆம் வருடம் இண்டர்குளோபல் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் ராகுல் பாத்தியாவுடன் அமெரிக்கா என்.ஆர்.ஐ ராகேஷ் எஸ் கங்கவால் ஆகியோர் இணைந்து துவங்கினர். இதில் இண்டர்குளோபல் நிறுவனம் 51.12 சதவீதமும், கங்க்வால் குழு நிறுவனம் 48 சதவீதம் பங்குகளை வைத்துள்ளது.