டெல்லி: இந்தியாவில் பணக்காரர்களை விட ஏழைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம், இன்றளவும் இந்தியாவை ஏழை நாடாக மட்டுமே பார்க்கும் பலர் உள்ளனர். இங்கு ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல திட்டங்கள் கொண்டு வந்தாலும், அவர்களுக்கு சரியை சென்று அடைவதில்லை.
இப்படி இருக்கும் போது அதிகப்படியான அல்ட்ரா ஹை நெட் பணக்காரர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 11வது இடத்தைப் பெற்றுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. க்ரெடிட் சூயிஸ் குளோபல் வெல்த் என்ற நிறுவனம் இத்தகைய கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு விகிதாச்சாரம் இந்தியாவில் அதிகமாக உள்ளதாகவும் இந்தப் புள்ளிவிவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
50 மில்லியன் டாலர் சொத்துக்கள்
கிரெடிட் சூயிஸ் குளோபல் வெல்த் அமைப்பின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 1,000 பேரிடம் 50 மில்லியன் டாலருக்கு மேல் சொத்துக்கள் உள்ளது என தெரிவித்துள்ளது.
100 மில்லியன் டாலர் சொத்துக்கள்
மேலும், இந்தியாவில் 650 பேரிடம் 100 மில்லியன் டாலருக்கு மேல் சொத்து உள்ளதாக இந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
24 லட்சம் பேரிடம் 100,000 டாலர்
இந்தியாவில் 24 லட்சம் பேரிடம் 100,000 டாலர் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் இந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.
ஆனாலும், இந்தியாவில் வறுமை!
பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்த போதிலும், இந்தியாவில் 95% பேர் ரூ.6 லட்சத்துக்கும் ($10,000) குறைவாகவே சொத்து வைத்துள்ளனர். இதனால் ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு விகிதாச்சாரம் இந்தியாவில் அதிகமாக உள்ளதாக இந்தப் புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா நம்பர் ஒன்
இந்தப் புள்ளிவிவரப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. சுமார் 62,800 அல்ட்ரா ஹை நெட் பணக்காரர்கள் அங்கு உள்ளனர். உலக அளவில் இது 49 சதவீதமாகும்.
சீனாவுக்கு 2வது இடம்
இந்தப் பட்டியலில் சீனா 7,600 மில்லினியர்களுடன் 2வது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் அங்கம் வகிக்கும் நாடுகள்: ஜெர்மனி (5,500), பிரிட்டன் (4,700), பிரான்ஸ் (4,100), ரஷ்யா (2,800), கனடா (2,600), தைவான் (2,000), பிரேசில் (1,900), தென் கொரியா (1,900), மற்றும் ஹாங் காங் (1,500).
பணக்காரர்கள் அதிகரிப்பு
'பணக்காரன் பணக்காரனாகிக் கொண்டே போகிறான்; ஏழை ஏழையாகிக் கொண்டே போகிறான்' என்ற பழமொழியைத்தான் இந்தக் கணக்கெடுப்பும் தெரிவிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மில்லினியர்களின் எண்ணிக்கை 53 சதவீதம் அதிகரிக்குமாம்!
சீனாவில் டபுள்
2019க்குள் சீனாவில் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை டபுளாகும் என்றும் இக்கணக்கெடுப்பு கூறுகிறது. இந்திய மில்லினியர்களின் எண்ணிக்கை 61 சதவீதம் அதிகரிக்கும். அதேபோல் இந்தோனேசியாவில் 64 சதவீதமும், மெக்சிகோவில் 57 சதவீதமும், சிங்கப்பூரில் 50 சதவீதமும், பிரேசிலில் 47 சதவீதமும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.