தீபாவளி பண்டிகைக்கு பிறகு தங்க இறக்குமதியில் கட்டுப்பாடு!! அருண் ஜேட்லி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சில மாதங்களுக்கு முன்பு நடப்பு கணக்கு பற்றாக்குறை வலுவானதை தொடர்ந்து தங்க இறக்குமதியில் சில தளர்வுகளை ஏற்படுத்தியது மத்திய அரசு. ஆனால் தற்போது இந்த தளர்வின் மூலம் நாட்டில் தங்க இறக்குமதி 5 மடங்கு அதிகரித்துள்ளது.

 

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

இதனால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பண்டிகை காலத்திற்கு பிறகு, தங்க இறக்குமதியில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

மத்திய அரசை போலவே ரிசர்வ் வங்கியும் தங்க இறக்குமதியில் கட்டுப்பாடுகளை விதிக்க பரிந்துரை செய்து வருகிறது. மேலும் 2012-13ஆம் நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.8 சதவீதம் உயர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது.

இறக்குமதி வரி

இறக்குமதி வரி

இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைந்த மத்திய அரசு தங்க இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்தது மட்டும் மேலும் சில கட்டப்படுகளை அறிவித்தது.

தங்க இறக்குமதி அதிகரிப்பு
 

தங்க இறக்குமதி அதிகரிப்பு

விழாகாலத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதத்தில் 3.75 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் தங்க இறக்குமதி 682.5 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt to re-look at gold import curbs after Diwali: Jaitley

Faced with 5-fold rise in gold imports that is pushing up the current account deficit, finance minister Arun Jaitley on Monday said the government would look at re-imposing curbs on gold imports after Diwali.
Story first published: Tuesday, October 21, 2014, 13:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X