டெல்லி: மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 2014-15ஆம் நிதியாண்டின் திட்டமிடப்படாத செலவுகளில் 10 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது.
ஆதாவது மத்திய அமைச்சர்களின் விமான பயணம், 5 ஸ்டார் ஹோட்டகளில் கூட்டம் போன்ற செலவுகளை உள்ளங்கியது தான், திட்டமிடப்படாத செலவீனங்கள் இதை கட்டுக்குள் கொண்டு வரவும், செலவுகளை குறைக்கவும் மத்திய அரசு கடுமையான முடிவுகளை எடுக்க உள்ளது.
கட்!! கட்!!
இச்செலவீன குறைப்பில் நான்கு முக்கிய புள்ளிகளை நிதியமைச்சகம்குறிப்பிட்டுள்ளது.
1. இனி அரசு அதிகாரிகளுக்கு முதல் வகுப்பு விமான பயணங்கள் கிடையாது.
2. ஐந்து நச்சத்திர ஹோட்டல்களில் நடக்கும் அரசு முறையான கூட்டங்கள் குறைப்பு.
3. புதிய வாகனகள் வாங்குவதற்கு தடை.
4. புதிய பணியாளர்கள் அமைப்பதல் குறைப்பு.
செலவீன குறைப்பு
செலவுகளை குறைப்பில் வட்டித் தொகை செலுத்துதல், கடன் தொகையை செலுத்துதல், பாதுகாப்புத்துறைக்கு அளிக்கப்படும் மானியங்கள், மத்திய அரசு அதிகாரிகளின் சம்பளம், ஒய்வுதியம் மற்றும் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும் மானியங்கள் இதில் அடங்காது. முன்பு இருந்ததை போலவே இத்தகைய திட்டங்கள் செயல்படும்.
ப.சிதம்பரம்
ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இச்செலவீன குறைப்பை 15 சதவீதமாக அறிவித்தார். தற்போது அருண் ஜேட்லி 10 சதவீத குறைப்புடன் செலவுகளை சமன் செய்துள்ளார்.
அறிக்கை
மேலும் இந்த கட்டப்பாடு மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் என்று, செலவீன அறிக்கைகளை நிதியமைச்சகத்திற்கு காலாண்டு வாரியாக சமர்ப்பிக்கவும் நிதியமைச்சகம் உத்திரவிட்டுள்ளது.
வரி வசூல்
நிதியமைச்சகம் வகுத்த வரி வசூல் இலக்கில் இன்னும் 25.8 சதவீதத்தை எட்ட வேண்டும் என்றும், நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாத காலத்தில் செய்த வரி வசூல், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5.8 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
மேலும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதிகப்படியான அன்னிய முதலீட்டுக் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறையை 4.1 சதவீதமாக குறைத்தள்ளது நிதியமைச்சகம். இது 7 வருட சரிவை பதிவு செய்துள்ளது. மேலும் 2017ஆம் நிதியாண்டிற்குள் இதை 3 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.