மும்பை: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா தனது ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) வகை கார்களை உற்பத்தி செய்யும் பிரிவை அமெரிக்காவில் துவங்க உள்ளது.
ஜாக்குவார் மற்றும் லேண்ட் ரோவர் வகை கார்களுக்கு உலக அளவில் நல்ல டிமாண்ட் இருந்து வரும் சூழலில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக புதிய தொழில் பிரிவுகளை டாடா தொடங்கி வருகிறது. தற்போது ஐரோப்பாவிலுள்ள ஜேஎல்ஆர் யூனிட்டில் ஆண்டுக்கு 450,000-500,000 வரை கார் உற்பத்தி நடக்கிறது.
அடுத்த மூன்று மாதங்களில் சீனாவில் கார் உற்பத்தி ஆலையை தொடங்க உள்ள டாடா அங்கு 130000 கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. பிரேசிலில் உள்ள ஆலை ஆண்டுக்கு 24 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்துவருகிறது.
இந்நிலையில் பெருகிவரும் தேவையை கணக்கில் கொண்டு அமெரிக்காவில் ஜேஎல்ஆர் ஆலையை நிறுவ டாடா முடிவு செய்துள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் பிரிவின் தலைமை நிதி அலுவலர் கென்னத் கிரேஜோர் உறுதி செய்துள்ளார்.