சென்னை: இந்தியாவில் நிதிச் சந்தைகளை பெரும்பாலும் ஈக்விட்டி மற்றும் டெபிட் சந்தைகள் என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
இவற்றைத் தவிர, அன்னியச் செலாவணி சந்தைகளும் உள்ளன. முதலில் கேப்பிட்டல் சந்தைகள் மற்றும் பணச் சந்தைகளைப் பற்றிப் புரிந்து கொள்வோம்.
பணச் சந்தை
பொதுவாக பணச்சந்தையில் பல்வேறு விகையான கடன் பத்திரங்களின் வர்த்தகம் நடைபெறும். இத்தகைய கடன் பத்திரங்கள் பெருவாரியாக குறைந்த காலத்தில் முடிவுறும் திட்டங்களாகவே இருக்கும். உதரணமாக அரசுப் பத்திரங்கள், கஜானா பில்கள், கமர்சியல் பேப்பர்கள், வைப்பு நிதிச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
கேப்பிட்டல் சந்தை
இதுவும் டெபிட் உபகரணங்களை வர்த்தகம் செய்வது தான், ஆனால் நீண்ட காலத்திற்கு. தனி நபர்கள், நிதி நிறுவனங்கள், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் இதில் அடங்குவர். பிரைமரி சந்தை மற்றும் செகண்டரி சந்தை என்றும் கேப்பிட்டல் சந்தையை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
பிரைமரி சந்தை
ஒரு நிறுவனம் முதல் முறையாக மார்க்கெட்டில் வெளியிடும் பங்குகளை வர்த்தகம் செய்வது பிரைமரி சந்தை ஆகும்.
செகண்டரி சந்தை
அதே நிறுவனம் அதற்குப் பின் வெளியிடும் பங்குகளை வர்த்தகம் செய்வது செகண்டரி சந்தை எனப்படும்.
செபியின் கட்டுப்பாட்டில்...
செபி என்ற பங்குச் சந்தை அமைப்புதான் கேப்பிட்டல் சந்தைகளைக் கட்டுப்படுத்தி வைக்கிறது. செபியின் அனைத்து விதிமுறைகளுக்கும் கேப்பிட்டல் சந்தைகள் கட்டுப்பட வேண்டும்.