ஜெய்ப்பூர்: சில நாட்களுக்கும் முன் ஐஐடி கராக்பூர் மாணவருக்கு 1.55 கோடி சம்பளத்துடன் அமெரிக்காவில் வேலை வழங்கிய பேஸ்புக், கடந்த திங்கட்கிழமை ஐஐடி பாம்பே மாணவிக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தை அளித்துள்ளது. இதுவே ஐஐடி கல்லூரிகளில் கொடுக்கப்பட்டுள்ள அதிகப்படியான சம்பளம்.
ஆஷ்தா அகர்வால்
ஐஐடி பாம்பே கல்லூரியில் நான்காவது வருடம் கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வரும் ஆஷ்தா அகர்வால்-க்கு வெறும் 20 வயது தான் ஆகிறது. இவர் தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 3வது வருட இன்டர்ன்ஷிப்பை கடந்த மே-ஜூன் மாதத்தில் முடித்துள்ளார்.
ப்ரீ பிளேஸ்மென்ட்
இதனை தொடர்ந்து ஆஷ்தா அகர்வாலின் திறமையை கண்டு பேஸ்புக் நிறுவனம் இவருக்கும் தனது படிப்பை முடிக்கும் முன்னரே நிறுவனத்தில் பணியை உறுதி செய்தது.
குளிர்கால விடுமுறை
அமெரிக்காவில் குளிர்கால விடுமுறைக்கு சொந்த ஊரான ஜெய்ப்பூர் வந்த ஆஷ்தா அகர்வால் அதுகுறித்து கூறுகையில்,"பேஸ்புக் நிறுவனத்தில் வேலை உறுதியானது நினைத்து மிகவும் மிகழ்ச்சி அடைகிறேன் என்றும், கல்லூரியில் 8 செமஸ்டரை முடித்த உடன் கலிப்போர்னியாவில் உள்ல தலைமை அலுவலகத்தில் சேர ஆசையாக உள்ளது" என தெரிவித்தார்.
அக்டோபர் 2015
மேலும் கல்லூரி தேர்வுகளை முடித்து விட்டு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாத துவக்கத்தில் நிறுவன பணிகளில் சேர உள்ளார் ஆஷ்தா அகர்வால்.
பெற்றோர்கள்
ஆஷ்தா அகர்வாலின் தந்தை அசோக் அகர்வால் ராஜஸ்தான் மாநில தொலைதொடர்பு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறார், இவரது சகோதரி கெமிக்கல் இன்ஜினியராக உள்ளார்.
முதல் இடம்
இவர் சிறு வயது முதல் இந்தியா மற்றும் உலகளவில் நடக்கும் பல அறிவியல் தேர்வுகளில் முதல் இடத்தை தட்டிச்சென்றுள்ளார்.