சென்னை: உள்நாட்டு விமான சேவை வழங்கும் நிறுவனங்களில் மிக முக்கிய இடத்தில் உள்ளது ஸ்பைஸ்ஜெட், இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கியதால் எஞ்சிய நிறுவனங்கள் வாய்ப்பை பயன்படுத்தி கட்டணங்களை தாறுமாறாக உயர்த்துயுள்ளது.
பொதுவாக சென்னையில் இருந்த மதுரைக்கு செல்ல விமானத்தில் சராசரியாக 5,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாய் வரை இருக்கும். ஆனால் இன்று இதன் விலை 19,300 ரூபாய். கிட்டதட்ட 3 மடங்கு அதிகம்!!.
அதிகப்படியான லாபம்
மேலும் நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சேவைகள் திடீரென முடங்கியதால் பயணிகள் வேறு வழியே இல்லாமல் பிற விமான நிறுவனங்களை நாடவேண்டிய நிலை வந்தது. இந்நிலையில் கட்டணங்களை உயர்த்தி கொள்ளை லாபம் பார்த்து விமான நிறுவனங்கள்.
50,000 ரூபாய்
இதேபோல் மும்பையில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான விமான கட்டணம் 50,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் கண்மூடித்தனமாக கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
ஆதிக்கம்
உள்நாட்டு விமான சேவையில் அனைத்து வழித்தடங்களிலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிக்கம் செலுத்தியது, இந்நிறுவனம் முடங்கியது பிற நிறுவனங்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. மேலும் இந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க எந்த ஒரு வங்கியும் நிதியுதவி அளிக்க முன் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
பண்டிகை காலம்
மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி இக்காலகட்டத்தில் விமான கட்டணங்கள் மேலும் உயரும் என டிராவல்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. அதைபோல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் விமான பயணங்களுக்காக டிக்கெட் புக் செய்ய வேண்டம் எனவும் வாடிக்கையைாளர்களை டிராவல்ஸ் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.