மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் புதன்கிழமை நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கியது. இதன் மூலம் ஒரே நாளில் சுமார் 700 மில்லியன் டாலரை நிதியை திரட்டியது.
இந்நிறுவன முதலீட்டில் புதிதாக கத்தார் முதலீட்டு ஆணையம் இணைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு மட்டும் 11 பில்லியன் டாலராகும். வெகு நாட்களாக மத்திய கிழக்கு நாடுகள் இந்தியா இ-காமர்ஸ் சந்தையில் வளர்ச்சியில் கண் வைத்திருந்தது. மேலும் இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியுள்ளது கத்தார் முதலீட்டு ஆணையம்.
150 மில்லியன் டாலர்
இந்தியாவில் இத்துறையில் வேகமான வளர்ச்சி கத்தார் முதலீட்டு ஆணையத்தை பிளிப்கார்ட் நிறுவனத்தில் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வைத்துள்ளது.
பிற முதலீட்டாளர்கள்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் முந்தைய முதலீட்டாளர்கள் மட்டும் சுமார் 500 முதல் 600 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
7 மடங்கு வளர்ச்சி
இந்தியாவில் இத்துறையில் 2018ஆம் ஆண்டிற்குள் சுமார் 22 பில்லியன் டாலர் (7 மடங்கு) அளவிற்கு உயரும் என ஆய்வு அறிக்கைகள் கூறுகிறது.
பார்தி ஏர்டெல்
கத்தார் முதலீட்டு நிறுவனம் பிளிப்கார்ட் மட்டும் அல்லாமல் உலகின் பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதில் டிஃபனி, பார்க்லேஸ், கிரேடிட் சுசி ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதேபோல் இந்தியாவில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
பிளிப்கார்ட்
2014ஆம் நிதியாண்டில் மட்டும் சச்சின் மற்றும் பின்னி பன்சால் தலைமை வகிக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலர் அளவு நிதிகளை திரட்டியுள்ளது. இதில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் அடக்கம்.
அமேசான்
மேலும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சக போட்டி நிறுவனமான அமேசான் இவ்வருடம் 2 பில்லியன் டாலர் முதலீட்டுடன், 4 பில்லியன் டாலர் வர்த்தகம் குறிக்கோள் உடன் செயல்பட்டு வருகிறது.