மும்பை: ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (KYC) மற்றும் பண சலவையை ஒழிக்கும் திட்டங்களின் விதிமீறல்கள் செய்ததை கண்டித்து நாட்டின் முன்னணி தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கிக்கு 50 இலட்சம் ரூபாயும், பாங்கு ஆஃப் பரோடா வங்கிக்கு 25 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்செயல்ரகளை குறித்து ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாடியாலா ஆகிய வங்கிகளை எச்சரித்துள்ளது ரிசர்வ் வங்கி.
வங்கியின் கவனக்குறைவு
இந்த 5 வங்கிகளிலும் போலியான ஆவனங்களை அளித்து சில மோசடி ஆசாமிகள் வங்கி கணக்கை திறந்து பண பிரமாற்றம், கசோலை பரிமாற்றும் என வங்கியின் அனைத்து சேவைகளையும் 1 மாதம் முதல் 2 வருடம் வரை பயன்படுத்தி உள்ளார்கள், இந்த கவனக் குறைவிற்காகவே வங்கிகளை கண்டித்து ரிசர்வ் வங்கி அபாரதம் விதித்துள்ளது.
நிறுவனங்களின் புகார்
மேலும் இவ்வங்கிகள் தனிநபர் பெயர்களில் இல்லாமல் நிறுவனங்களின் பெயரில் உள்ளது. நிறுவனங்கள் போலியான வங்கி கணக்குகளை குறித்த புகார்களை அளித்ததன் பேரில் ரிசர்வ் வங்கி தீவிர விசாரனைக்கு பிறகு வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு
தனி நபர் வங்கி கணக்கில் அதிகளவில் பண பரிமாற்றம் செய்ய முடியாததை உணர்ந்த மோசடி கும்பல்கள் நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கை திறந்துள்ளது. இதன் மூலம் அதிகாப்படியான பணபுழக்கத்தை செய்தும் உள்ளது.
கடுமையான நடவடிக்கை
மேலும் இனி இவ்வங்கிகளில் வங்கி கணக்கு திறப்பதில் கடுமையான விதிமுறைகளை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.