1 லட்சத்துக்கும் அதிகமான அரசாங்க பணியிடங்களை நிரப்பும் பணியில் தெலுங்கானா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கான தனி மாநிலமாக பிரிந்த சில நாட்களிலேயே இம்மாநிலத்தில் வளர்ச்சி அதிகளவில் தீட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1 லட்சத்துக்கும் அதிகமான மாநில அரசாங்க பணியிடங்களை ஒவ்வொரு கட்டமாக நிரப்பப்படும் என தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TSPSC) தலைவர் காட்னா சக்ரபாணி கூறியுள்ளார்.

 

புதிய மாநிலத்தின் முதல் தேர்வாணையத் தலைவராக வியாழக்கிழமை அன்று பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சக்ரபாணி, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாகவும் தகுதியின் அடிப்படியில் மட்டுமே நடைபெறும் என தெரிவித்தார்.

 
1 லட்சத்துக்கும் அதிகமான அரசாங்க பணியிடங்களை நிரப்பும் பணியில் தெலுங்கானா!!

அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் மொத்தம் 1.07 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், மாநில சட்ட சபையில் சமீபத்தில் அறிவித்தார்.

எக்சிக்யுடிவ் குரூப் I மற்றும் குரூப் II சேவைகளிலும் பல்வேறு எக்சிக்யுடிவ் அல்லாத சேவைகளிலும் தான் இந்த காலியிடங்கள் அதிகமாக உள்ளது.

1 லட்சத்துக்கும் அதிகமான அரசாங்க பணியிடங்களை நிரப்பும் பணியில் தெலுங்கானா!!

தெலுங்கானா போராட்டம் மற்றும் அதையடுத்து ஏற்பட்ட பிரிக்கும் செயல்முறை ஆகிய காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு பணிகளை அரசாங்கத்தால் நடத்த முடியவில்லை. அதனால் அரசாங்க வேலைக்கான உச்ச வயது வரம்பை கூடுதலாக 5 வயது வரை ஏற்ற மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telangana: over 1 lakh govt jobs to be filled

Over one lakh State government jobs will be filled-up in a phased manner, according to Ghatna Chakrapani, Chairman of Telangana State Public Service Commission (TSPSC).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X