டெல்லி: அரசு விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, வாடிக்கையாளர்களை கவரவும், அதிகரிக்கவும், எக்னாமிக் கிளாஸ் பயணிகளுக்கு இலவச உணவு அளிக்கும் திட்டத்தை தூசி தட்டி மீண்டும் அறிவித்துள்ளது.
இத்திட்டம் ஏர் இந்திய பயணிகளுக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவங்க உள்ளது.
2012ஆம் ஆண்டு
இந்த இலவச உணவு திட்டத்தை 2012ஆம் ஆண்டு வரை ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக பயணிப்பவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. பின்னாளில் செலவீண குறைப்பு காரணமாக இச்சேவை நிறுத்தப்பட்டது.
ஸ்டார் அலையன்ஸ்
ஏர் இந்தியா நிறுவனம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பெருக்கவும், தொடர் நஷ்டத்தில் இருந்து மீளவும் பன்னாட்டு விமான நிறுவனமான ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது தற்போது செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டு பயணிகள்
இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பயணிகளின் எண்ணிக்கை சற்று கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் அளவை மேலும் அதிகரிக்க இலவச உணவு திட்டத்தை ஏர் இந்தியா மீண்டும் புதுப்பித்துள்ளது.
விமானகள்
பொதுவாக ஏர் இந்தியா உள்நாட்டு விமான சேவையில் ஏர்பஸ் 320 விமானங்களை மட்டுமே இயக்கி வந்தது. ஆனால் பண்டிகை காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் போயிங் 747, 777-200,777-300,787 ஆகிய ரக விமானங்களில் ஒவ்வொன்றை இயக்கி வருகிறது.