டெல்லி: இனி அஞ்சலக சேமிப்பு கணக்கை, அனைத்து ஏடிஎம் மையங்களில் உபயோகிக்கும் வகையில் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் வெளியிட இருக்கும் மத்திய பட்ஜெட்டில், அஞ்சலக சேமிப்பு சேவையை வங்கிச் சேவையில் இணைக்கும் வகையில் இந்தியா போஸ்ட் சட்டதிட்டங்களை மாற்றியமைக்கப்பட உள்ளது.
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கின் பயன்பாடு கோர் பாங்கிங் செல்யூஷன் (CBS) தளத்தில் இருந்தாலும், இது நாள் வரையில் நாம் அஞ்சலகங்களில் மட்டுமே பயன்படுத்தி வந்தோம்.
ஆனால் இந்திய தாபல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "CBSஇல் இணைக்கப்பட்ட அனைத்து அஞ்சலங்களில் கணக்கு வைத்திருப்பவர்களு பேஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் பாங்க் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளது.
இத்தகைய டெபிட் கார்களை கொண்டு பணப்பரிமாற்றம், பில்களுக்கான பணத்தை செலுத்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் செய்துக்கொள்ளும் வசதி கிடைக்கும்.
இந்தியாவில் CBS தளத்தில் 676 பேஸ்ட் ஆபீஸ் இணைக்கப்பட்டுள்ளது இதில், 4 ஹெட் பேஸ்ட் ஆபீஸ்-உம் அடக்கம். இந்த 676 அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கில் மின்ணணு முறையில் பணத்தை வைப்பு நிதியிலும் எளிமையாக மாற்றிக்கொள்ள முடியும்.