டெல்லி: இந்தியாவில் வர்த்தக்தில் ஈடுப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் சந்திக்கும் வரி மற்றும் பரிமாற்ற பிரச்சனைகளை களைய மத்திய நிதியமைச்சகம் புதிய வரி செலுத்தும் கட்டமைப்பை உருவாக்க உள்ளது.
மத்திய நிதியமைச்சகத்துடன் இணைந்து மத்திய நேரடி வரி வாரியம் இப்புதிய கட்டமைப்பை உருவாக்குகிறது, இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் வரி செலுத்துவதில் இருக்கும் பிரச்சனைகளை எளிமையாகவும், விரைவாகவும் களைய உதவியாக இருக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புதிய வரி செலுத்தும் கட்டமைப்பின் மூலம் வோடபோன் மற்றும் ஷெல் போன்ற பல புதிய பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தகத்திற்காக கால் பதிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இப்புதிய கட்டமைப்பு மத்திய அரசால் 2009ஆம் நிறுவப்பட்ட வரி செலுத்தும் கட்டமைப்பை மாறியமைக்க உள்ளது. மேலும் இது 2015ஆம் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இப்புதிய கட்டமைப்பின் படி பிரச்சனைகளை களைய 5 புதிய குழுக்கள் அமைக்கபட்டுள்ளது இதில் மும்பை மற்றும் டெல்லியில் தலா இரண்டும், பெங்களுரில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய குழுக்கள் மூலம் இந்தியாவில் செயல்படும் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.