கலிபோர்னியா: மொபைல், கணினி மற்றும் இண்டர்நெட் உலகில் தனக்கென ஒரு பார்முலாவை பயன்படுத்தி, ஒரு தனி உலகத்தை அமைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், உலகில் எந்த ஒரு கார்பரேட் நிறுவனமும் எட்டதாத அளவிற்கு அதிகப்படியான லாபத்தை அடைந்துள்ளது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 6 மொபைலின் விற்பனை சீனாவில் மட்டும் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்நிறுவனம் கடந்த வருடம் பதிவு செய்த 57.6 பில்லியன் டாலர் வருவாயில் இருந்து 74.6 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
18 பில்லியன் டாலர் லாபம்
அதுவரை உலகில் உள்ள எந்த ஒரு கார்பரேட் நிறுவனமும் வருடாந்திர லாப அளவீட்டில் 18 பில்லியன் டாலர் வித்தியாசத்தை கண்டதில்லை என S&P சந்தை ஆய்வாளர் ஹவார்ட் தெரிவித்தார். மேலும் இது உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இது சவலாகவே அமைந்துள்ளது.
ஐபிஎம்
இத்தகைய வருவாய் அதிகரிப்பின் காரணமாக இந்நிறுவனத்தின் கருவூலத்தில் 178 பில்லியன் டாலர் சேர்ந்துள்ளது. இதனை கொண்டு ஆப்பிள் நிறுவனம் உலகிலேயே மிகப்பழமையான நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தை வாங்க முடியும், இல்லை என்றால் அனைத்து அமெரிக்க பிரஜைகளுக்கும் 556 டாலர் அளிக்க முடியும்.
பங்கு சந்தை
இந்நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியான நிலையில் பங்குசந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5 சதவீதம் அதிகரித்து 114.90 டாலர் என்ற அளவு உயர்ந்தது.
அடுத்து என்ன
மேலும் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் முன்பு வருகிற ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் வாட்ச் வெளியிட உள்ளோம் என தெரிவித்தார்.
சீனாவில் ஐபோன் விற்பனை
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மாடல் மொபைல்கள் வெளியான சில மணிநேரங்களில் இந்த மொபைலின் பென்டிங் டிஃபக்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் மீது கிளம்பிய அத்தனை எதிர்ப்புகளையும் மீறி உலகளவில் 74.5 மில்லியண் மொபைல்கள் விற்பனையாகியுள்ளது. இதில் சீனாவின் விற்பனையில் மட்டும் 70 சதவீத வளர்ச்சி.