நடப்பு நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் 12% வளர்ச்சி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் மிகப்பெரிய விட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் 2014ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் 12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் 2வது மற்றும் 3வது கட்ட நகரங்களில் வீட்டுக் கடன்களுக்கு அதிகப்படியான தேவை இருந்ததால் இந்நிறுவனம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்த்து சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அதிகப்படியான லாபத்தை பெற்றுள்ளது.

நடப்பு நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் 12% வளர்ச்சி!!

இந்த முன்று மாத காலகட்டத்தில் இந்நிறுவனம் 1,425 கோடி ரூபாய் லாபமாக பெற்றுள்ளது, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இதன் அளவு 1,277 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.

இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 14 சதவீதம் உயர்ந்து 6,871 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

டிசம்பர் 31,2014 ஆம் ஆண்டின் கணக்கின் படி இந்நிறுவனத்தின் கடன் அளவு 2,19,951 கோடி ரூபாயாக இருந்தது.

மேலும் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் மட்டும் அல்லாமல் வீட்டுக்கடன் அளிக்கும் அனைத்து நிறுவனங்களுமே இரண்டு இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில் இந்தியாபுல்ஸ் நிறுவனம் 21 சதவீதமும், திவான் ஹவுசிங் நிறுவனம் 16 சதவீதமும், எல்.ஐ.சி ஹவுசிங் நிறுவனம் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC Q3 profit up 12% on good demand in small towns

Housing Development Finance Corporation has posted a 12 per cent growth in its third quarter net profit aided by higher demand for home loans in the tier - II and tier - III towns.
Story first published: Thursday, January 29, 2015, 17:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X