பெங்களுரூ: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக கருதப்படும் இன்போசிஸ், அமெரிக்க ஆட்டோமேஷன் தொழில்நுட்ப நிறுவனமான பனாயா நிறுவனத்தை 200 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தும் திட்டத்துடன் இன்போசிஸ் உள்ளது.
புதிய நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டம் அனைத்தும் இந்நிறுவனத்தின் 'Renew and New' திட்டத்தின் ஒரு பகுதி எனவும், இதன் மூலம் இந்நிறுவனத்தின் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு துறையை மேம்படுத்த வழிவகுக்கும் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
முதல் படி
இன்போசிஸ் நிறுவனத்தின் 'Renew and New' திட்டத்தின் முதல் படியே பனாயா நிறுவனத்தை கைபற்றியது என இந்நிறுவனத்தின் தலைவரான விஷால் சிக்கா தெரிவித்தார்.
பனாயா
இந்நிறுவனத்தின் கிளவுட்குவாலிட்டி சூட் சேவையை இன்போசிஸ் நிறுவனம் அஜல் SaaS திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டு, குறைவான விலையிலும், எளிய முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.
மார்ச் 31
மேலும் இந்நிறுவனத்தை கைபற்றும் பணிகள் அனைத்தையும் வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க இன்போசிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வேட்டை
விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, ரோபடிக்ஸ் துறையில் துவக்க நிறுவனங்களை அதிகளவில் கைபற்ற திட்டமிட்டுள்ளது.
முதல் நிறுவனம்
சிக்கா அவர்கள் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்போசிஸ் நிறுவனம் ஒரு நிறுவனத்தை கூட கைபற்றவில்லை. இதுவே முதல் நிறுவனம் என்பதும் குறிப்பிடதக்கது.
காலாண்டு முடிவுகள்
2014ஆம் நிதியாண்டின் டிசம்பர் மாத முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் பண இருப்பு அளவு 5.65 பில்லியன் டாலராக (34.873 கோடி ரூபாய்) உள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.