டெல்லி: சில மாதங்களுக்கு முன் முறைகேடாக வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க உரிமங்களை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் மூலம் நாட்டில் நிலக்கரி திட்டுப்பாடு நிலவியது. நாட்டின் மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் நிலக்கரி தட்டுப்படை குறைக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்த 214 நிலக்கரி சுரங்க தொகுதிகளை ஏலமுறையில் ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டது.
இதன் படி ஏலம் கடந்த வாரம் துவங்கியது, 7 நாள் ஏல முடிவில் வெள்ளிக்கிழமை மத்திய அரசு சுமார் 84,000 கோடி நிதி திரட்டியுள்ளது.
மேலும் இரண்டாம் கட்ட ஏலம் பிப்ரவரி 25ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடக்க உள்ளதாக கோல் இந்தியா செயலாளர் அனில் ஸ்வரூப் தெரிவித்தார்.
முதல் கட்ட ஏலத்தில் 27 தொகுதிகளை முறைப்படுத்தப்படாத துறைகளுக்கும், 56 தொகுதிகளை மின் உற்பத்தி செய்யப்படும் முறைப்படுத்தப்படாத துறைகளுக்கு ஒதுக்கப்பட்டதாக இத்துறை தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட ஏலத்தில் மீதமுள்ள 83 தொகுதிகளை ஏலம் விட திட்டமிட்டுள்ளதாகவும் இத்துறை தொரிவித்துள்ளது.
இந்த 83,662 கோடி ரூபாய் நிதியில் பெரும்பாலான தொகை ஏழை மாநிலங்களுக்கு செல்ல உள்ளதாக ஸ்வரூப் தெரிவித்தார். இதில் 39,900 கோடி ரூபாய் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கும், 18,900 கோடி ரூபாய் மகாராோடிரா மாநிலத்திற்கு சொல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.