டெல்லி: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் மோஷே யாலோன் வியாழக்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இச்சந்திப்பின் முடிவில் இந்தியா இஸ்ரேல் மத்தியில் பாதுக்காப்பு துறை சார்ந்த 2 பில்லியன் டாலர் மதிப்புடைய திட்டத்தில் இருநாடுகளும் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தெரிகிறது.
மேலும் இஸ்ரேல் இந்தியாவுடன் இணைந்து விவசாயம், தண்ணீர் மேலாண்மை மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய துறைகளில் பணியாற்றவும் ஆர்வம் காட்டி வருவகிறது.
இச்சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் கூறுகையில் இரு நாடுகளும் முக்கிய துறைகளில் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளதாகவும். இத்திட்டங்களை குறித்து பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அவர்களை சந்தித்து பேசியதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இருநாடுகளும் இணைந்து செயல்பட 1992ஆம் ஆண்டு இணைப்பு ஒப்புந்தம் செய்துக்கொண்டாலும், இஸ்ரேல் உயர் அதிகாரிகள் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.
பாதுகாப்பு துறையில் மத்திய அரசு அன்னிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தை அடுத்து இஸ்ரேல் இந்தியாவுடன் அதிகளவிலான வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.